சுவைமிக்க நண்டு மசாலா செய்வது எப்படி?





சுவைமிக்க நண்டு மசாலா செய்வது எப்படி?

0
கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் ஒரு வகை உணவு நண்டு. 
சுவைமிக்க நண்டு மசாலா செய்வது எப்படி?
இது மிகவும் சுவை மிகுந்த உணவாக இருப்பதுடன், நண்டில், அத்தியாவசிய கொழுப்பு, ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளது. 

ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நண்டை உணவில் இணைத்துக் கொள்ளும்படி ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

நண்டின் உடல் பகுதியில் 45% வரை ஒருவர் சாப்பிடலாம். இதனால் உடல் வலிமை அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. 

நாட்பட்ட இதய நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் நண்டு எடுத்துக் கொள்வதால் அதன் பாதிப்பு குறைகிறது மற்றும் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கிறது.

தேவையானவை


பச்சை மிளகாய் – 4

இஞ்சி, பூண்டு விழுது – 5 மேசை க்கரண்டி

மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி
தக்காளி – 2 கப்

மிளகாய்த் தூள் – அரைத் தேக்கரண்டி

வெங்காயம் – ஒரு கப்

தேங்காய் த்துருவல் – ஒரு கப்

காய்ந்த மிளகாய் – 2

கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை, உப்பு – தேவையான அளவு

செய்முறை :
சுவைமிக்க நண்டு மசாலா
முதலில் நண்டை தண்ணீரில் நன்கு அலசி, இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காய த்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். 

தக்காளியையும் கழுவி சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும், கொத்த மல்லியையும் கழுவி, கொத்த மல்லியைப் பொடியாக நறுக்கவும்

பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கி, நறுக்கி, தேங்காய்த் துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

பெரிய வாணலி யாக எடுத்துக் கொண்டு, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளிக்கவும்.

கடுகு வெடித்தவுடன் காய்ந்த மிளகாயினைப் போட்டு ஐந்து விநாடிகள் வதக்கி இஞ்சி, பூண்டு விழுதி னையும் சேர்த்து நன்கு வதக்கவும்

விழுதுகளின் நீர் ஆவியாகும் வரை வதக்கி, அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். 

தக்காளியைப் போட்டு, எண்ணெய் விடும் வரை வதக்கவும். பின் தீயின் அளவைக் குறைத்து தேங்காய் விழுதினைச் சேர்க்கவும்.
சுமார் இரண்டு நிமிடங்கள் புரட்டிய பின் நண்டு களையும், கறிவேப்பிலை யையும் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 

தீயின் அளவைக் குறைத்து கொள்ளவும். அவ்வபோது கிளறி விட்டு சுமார் 20 நிமிடங்கள் வேக விடவும். 

நன்கு வெந்ததும் இறக்கி கொத்த மல்லித் தழையினைத் தூவி பின்பு பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)