தேவையானவை
பாஸ்தா - ஒரு கப்
கேரட் – ஒன்று
துருவிய சீஸ் - ஒரு மேசைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சை பட்டாணி - கால் கப்
பீன்ஸ் - 5
வெங்காயம் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் - சிறிதளவு
புதினா - 3 இலைகள்
தக்காளி - ஒன்று
பூண்டு - 3 பல்
பிரிஞ்சி இலை - 2
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்க விடவும்.
பின் சிறிது உப்பு மற்றும் பாஸ்தாக்களை போட்டு வேக விடவும். பாஸ்தா வெந்த பின் மீதமுள்ள தண்ணீரை வடிக்கவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் வெண்ணெய் போட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.
பின் தக்காளி, தக்காளி சாஸ், புதினா, மிளகாய் தூள் போட்டு வதக்கவும்
வதங்கியதும் வேக வைத்த காய்கறிகள், உப்பு, கரம் மசாலாத் தூள், அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொதி வந்த பின் வேக வைத்த பாஸ்தாவை போட்டு கிளறி இறக்கவும். பின் துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.