தேவை யானப் பொருள்கள்:
சிக்கன் - சுமார் 1/4 கி
சின்ன வெங்காயம் - 7
தக்காளி - பாதி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 4 பற்கள்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்து மல்லி இலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கிராம்பு - 1
பிரிஞ்சி இலை - 1
சீரகம்
பெருஞ்சீரகம்
முந்திரி - 2 (விருப்ப மானால்)
செய்முறை:
முதலில் சிக்கனை சிறு துண்டு களாக நறுக்கி, நன்றாகக் கழுவி நீரை வடிய வைக்க வும்.
அடுத்து இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்க வும்.
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி சூடானதும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத் துள்ள பொருள் களைத் தாளித்து விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்க வும்.
அடுத்து இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி,பிறகு தக்காளி சேர்த்து வதக்க வும். அடுத்து சிக்கனை சேர்த்து வதக் கவும்.
நன்றாக வதங்கி யதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு போட்டுக் கிளறி ஒரு 1/2 டம்ளர் தண்ணீர், தேங்காய்ப் பால் ஊற்றி மூடி கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதித்து கெட்டி யாகி சிக்கன் வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு கிளறி, கொத்து மல்லி, புதினா சேர்த்து இறக்க வும்.
இது சாதம், சப்பாத்தி, நாண், பரோட்டா இவறிற்கு நன்றாக இருக்கும்.