சுவையான குதிரைவாலி பிரியாணி செய்வது எப்படி?





சுவையான குதிரைவாலி பிரியாணி செய்வது எப்படி?

சிறுதானியங்களை நோக்கி, சமூகம் திரும்பி கொண்டிருக்கிறது.. அந்தவகையில், அரிசி மற்றும் கோதுமை உணவுகளுடன் ஒப்பிடுகையில் அதிக சத்துக்களை கொண்டது 

சுவையான குதிரைவாலி பிரியாணி செய்வது எப்படி?
குதிரைவாலி.. கோதுமையில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட 6 மடங்கு நார்ச்சத்து இந்த குதிரைவாலி அரிசியில் இருக்கிறது என்றால் பாருங்களேன்.

குதிரைவாலி அரிசியில் வைட்டமின் A, B, C, D, K, இரும்புச்சத்துக்கள், மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன. 

உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் என ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 
இதயப் பிரச்சனை உள்ளவர்களும், ரத்தக் கொதிப்பு உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் குறிப்பிட்ட அளவில் இந்த அரிசியை பயன்படுத்தலாம். தசைகள், எலும்புகளுக்கு வலிமையை தருகிறது.

சிறுதானிய வகையைச் சேர்ந்த குதிரைவாலி உடலுக்கு மிகவும் நல்லது.  அதிக நீர் தேவைப்படாத வானம் பார்த்த பூமியைச் சேர்ந்த புன்செய் பயிராகும். தற்போது சுவையான குதிரைவாலி பிரியாணி செய்வது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி - 2 கப்

கேரட், பீன்ஸ் - 250 கிராம்

பீட்ரூட் - 1

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

வரமிளகாய் - 4

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 6 பற்கள்

சோம்பு - ஒரு மேசைக் கரண்டி

பட்டை - சிறு துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு

தயிர் ஆடை - ஒரு மேசைக் கரண்டி (விரும்பி னால்)

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 4 கப்

செய்முறை :
பெரிய வெங்காயத்தை நீளநீளமாக வும், தக்காளியைப் பொடி யாகவும் நறுக்கிக் கொள்ளவும். காய்கறி களைச் சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து வைக்க வும்.

பின்னர், மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ஏலக்காய், அரை மேசைக் கரண்டி சோம்பு, கிராம்பு, பட்டை ஆகிய வற்றைப் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். 

(நறுக்கி வைத்துள்ள தக்காளி யில் பாதியளவு சேர்த்து அரைத்தால் விழுது நன்றாக இருக்கும்). குதிரை வாலியை நன்றாகக் களைந்து 4 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். (ஒரு கப் குதிரைவாலிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றவும்)
பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு பொரிய விட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய வுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின்னர் அனைத்து காய்கறி களையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பாதியளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து காய்கறிகளை வேக விடவும்.
காய்கறிகள் அரை பதமாக வெந்ததும் குதிரை வாலியைப் போட்டு, மீதமுள்ள தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு வைக்கவும்.

கொதி வந்தவுடன் கலவையை நன்றாக கிளறி விட்டு, மூடி போட்டு வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். குக்கரை ஒரு டர்க்கி டவலை நனைத்து பிழிந்து விட்டு சுத்தி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து வெயிட் நீக்கி, வெந்த குதிரைவாலி பிரியாணியை நன்றாக கிளறி விடவும். இதில் மல்லி, புதினா போட்டு அலங்கரித்து ரைத்தாவுடன் பரிமாற லாம்.

மருத்துவ பயன்கள்:

உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது,

இரும்புச் சத்து ரத்த சோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத் திற்கும் உதவுகிறது.
Tags: