அருமையான வஞ்சரம் மீன் குழம்பு செய்வது எப்படி?





அருமையான வஞ்சரம் மீன் குழம்பு செய்வது எப்படி?

அடிக்கடி விலை கொடுத்து வாங்கி சாப்பிட முடியாத மீனாக இந்த வஞ்சிரம் உள்ளது. எனினும், ருசியில் தலைசிறந்து இருப்பதால் தான், எப்போதுமே இதற்கு ஒரு டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கிறது.
அருமையான வஞ்சரம் மீன் குழம்பு செய்வது எப்படி?
வஞ்சிரம் மீனில் புரோட்டீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 உள்ளன. ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுவதுடன், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

குறிப்பாக, பார்வை குறைபாட்டை மேம்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பை சீராக்குகிறது. உடல் எலும்புகளை வலுவாக்குகிறது. 
ஒரு நாளைக்கு 100 கிராம் மீன் உட்கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. 

வஞ்சிரம் மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலம் பெறும்.. சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த மீன் ஒரு நல்ல மருந்து. தவிர நல்லவகை கொழுப்புகளும் அதிகமாக உள்ளன. 

வஞ்சிரத்தில் குழம்பு செய்யலாம், வறுவல் செய்யலாம், பொரித்து சாப்பிடலாம். ஆனால், ஊறுகாய் போடவும் இந்த மீன் அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.
தேவையான பொருள்கள் :

வஞ்சரம் மீன் - 1/2 கிலோ,

சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது),

தக்காளி - 2 (நறுக்கியது),

பூண்டு - 10 பல்

புளி - 1 நெல்லிக்காய் அளவு,

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

மல்லித் தூள் - 2 டீஸ்பூன்,

நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன்,

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,

சீரகம் - 1/4 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

கறிவேப்பிலை - சிறிது,

கொத்தமல்லி - சிறிது.
சிறுநீர், தாமதமாகவோ, சொட்டு சொட்டாகவோ வெளியேறுகிறதா?
அரைக்க...
தேங்காய் - 1 கப்

சீரகம் - 1 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

செய்முறை
வஞ்சரம் மீன் குழம்பு
அரைக்க கொடுத்த வற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வும் முதலில் மீனை சுத்தம் செய்து, நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். 

பின்னர் புளியை 2 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பின் புளிச்சாறு சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீன் துண்டு களை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட வேண்டும். பின் தீயை குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

மீன் நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
Tags: