இந்தியாவிலும் அதிக அளவு இக்கீரை பயன்படுத்தபடுகிறது. இக்கீரையை மாமிச புலவு, காய்கறி புலவு ஆகியவற்றிக்கு சேர்ப்பதால் மனமும் ருசியையும் உணவில் மீதான ஈடுபாட்டையும் ஏற்படுத்துகிறது.
இக்கீரை பச்சையாகவும் உணவில் பயன்படுத்தலாம் .
ஊட்டசத்துக்கள்
100 கிராம் கீரையில்
இக்கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பசியைத் தூண்டி உணவிற்கு ருசியையும் கொடுக்கிறது.
வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது. தொடர்ந்து எடுக்கும் விக்கல் நீங்கும். மயக்கத்தை நீக்க இக்கீரையை கசக்கி நுகரலாம்.
தலைவலிக்கு இதன் சாற்றை நெற்றியில் பூசலாம். வாத நோய்க்கும் காய்ச்சலுக்கும் ,வறட்டு இருமலுக்கும் இது சிறந்த மருந்தாகும்.
மாதவிடாய் தாமதமாகும் பெண்கள் இக்கீரையை உலர்த்தி தூள் செய்து தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதவாது நீங்கும்.
புதினா இலையை ஒரு தம்புளர் நீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும்.
புதினாவுடன் இஞ்சியையும் உப்பும் சேர்த்து அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய் நாற்றம், அஜீரணம், பித்தமும் அகலும்.
புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம் மூட்டு வலி, ஆஸ்துமா, ஈரல் சம்பந்த பட்ட நோய்கள், சிறுநீர் உபத்திரம் நீங்கும்.
புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூலநோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது.