முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி??





முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி??

முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
 முருங்கைக்கீரை சூப்
இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி ஆகியவை மன வளம், நியாபக சக்தி  ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுகிறது. 

ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். 

முருங்கை  இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்பைக்  குறைக்க உதவுகின்றது.

மாலையில் டீ அல்லது காபி தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. சூப் வேண்டுமானாலும் குடிக்கலாம். சொல்லப் போனால் காபி, டீயை விட சூப் மிகவும் ஆரோக்கியமானது. 
அதிலும் முருங்கைக் கீரையை சூப் செய்து குடித்தால், மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த சூப் செய்து கொடுத்தால், அவர்களுக்கு இரும்புச் சத்து அதிகம் கிடைத்து, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்

தேவையான பொருட்கள்: 

முருங்கைக் கீரை - 4 கப்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 5 பற்கள்

தண்ணீர் - 6 கப்

இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)

சின்ன வெங்காயம் - 4 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

மிளகு - தேவையான அளவு

எண்ணெய்/நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:
முருங்கைக்கீரை சூப் செய்வது
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின்னர் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். 

பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
அடுத்து அதில் முருங்கைக்கீரை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் வேக வைத்து, மிளகு மற்றும் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், முருங்கைக்கீரை சூப் ரெடி!
குறிப்பு :

மாதவிடாய் வரும் போது வரும் வலிக்கு Dysmenorrhoea என்று பெயர். இது இயல்பு தான் என்றாலும் பல பெண்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். 

அந்த சமயங்களில் முருங்கை கீரையில் சூப் செய்து குடித்தால், மாதவிடாய் வலிக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.
Tags: