பட்டாணி குருமா செய்முறை !





பட்டாணி குருமா செய்முறை !

தேவையான பொருட்கள் : 

பட்டாணி – 200கிராம்

பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது

தக்காளி – 2

பூண்டு – 10 பல்

இஞ்சி – 1 சிறிய துண்டு

இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்

பச்சை மிளகாய் – 5 (காரத்திற்கு ஏற்ப)

தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு

சோம்பு பட்டை கல்பாசி கிராம்பு அரைக்க : 

தேங்காய் – 1 மூடி

கசகசா – சிறிதளவு

கிராம்பு – 2

சோம்பு பொடி வகைகள் : 

மிளகாய் பொடி -3 தேக்கரண்டி

சாம்பார் பொடி – 2 தேக்கரண்டி

மிளகு தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு
பட்டாணி குருமா
செய்முறை : 

1 . பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்கவும்.
உதடு மற்றும் வாய் பராமரிப்பு !
பின் சமைக்கும் முன் 3 தடவை நன்றாக கழுவவும்.

2 . ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள வைகளை போட்டு தாளித்து

பின் பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி  ஆகிய வற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி பின் பட்டாணி மற்றும் பொடி வகைகளை போட்டு

தண்ணீர் பட்டாணியை விட 3 பங்கு ஊற்றி உப்பையும் போட்டு கலக்கி மூடி வைத்து 2 அல்லது 3 விசில் வர விட்டு இறக்கி

பின் சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.

3 . நன்றாக கொதித்து பச்சை வாசம் போன பின் அரைத்து வைத்த தேங்காய், கசகசா, சோம்பு, கிராம்பு கலவையை ஊற்றி பின் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
ஆரஞ்சு பழங்களின் பயன்கள் !
சுவையான பட்டாணி குருமா ரெடி. இதனை சப்பாத்தி, பிரைடு ரைஸ், பரோட்டா, இட்லி, தோசை, சாதம் போன்ற பலவற்றிற்கு சைடிஷாக வைக்கலாம்.
Tags: