செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி?





செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி?

உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது.
செட்டிநாடு இறால் பிரியாணி - Chettinad Prown Briyani
இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. 

இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். 

புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். 

இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி - ஆக்ஸிடன்ட்டாக (Antioxidant) விளங்குகிறது. அனைத்து வகையான சத்துக்களையும் கொண்ட இறாலில் பிரியாணி செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : 
இறால் – கால் கிலோ

பாஸ்மதி அரிசி – அரை கிலோ

எண்ணெய் – 150 கிராம்

நெய் – ஒரு ஸ்பூன்

வெங்காயம் – 3

தக்காளி – 4

பச்சை மிளகாய் – 4

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தே.அளவு

எலுமிச்சை – ஒன்று

கொத்த மல்லி தழை – கால்கட்டு

புதினா – ஒரு கொத்து

பட்டை, ஏலம், கிராம்பு – தலா ஒன்று

செய்முறை: 
செட்டிநாடு இறால் பிரியாணி
எண்ணெயை காய வைத்து பட்டை, கிரம்பு, ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைக்க வேண்டும்.

பிறகு கொத்து மல்லி புதினா, தக்காளி ,பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு,

மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேக விட வேண்டும்.

தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேக விடவும்.

இப்போது அரிசியை முக்கால் வேக்காடில் வேக விட்டு அதில் அரை தேக்கரண்டி எண்ணை, எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்ட வேண்டும்.
கொட்டி தம்மில் விடவேண்டும் தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து

அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும்.

சிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவினால் போல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் விட வேண்டும்.
Tags: