உப்பினால் ஆரோக்கியம் கெடும் !





உப்பினால் ஆரோக்கியம் கெடும் !

0
உணவில் உப்பின் அளவை பதினைந்து சதவீதம் குறைத்தால் உலக அளவில் அடுத்த பத்து ஆண்டு களில் எண்பது லட்சம் பேர் உயிர் களைக் காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்துப்பு
மக்கள் தங்கள் ஆரோக்கியம் மேம்பட புகையிலை பழக்கத்தை நிறுத்து வதற்கு அடுத்த படியாக செய்ய வேண்டிய முக்கிய விஷயம்,

அவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது தான் என ஆராய்ச்சி யாளர்கள் சொல்கின்றனர்.

உலக சுகாதார நடவடிக்கைகள் முன்னுரிமை தரும் விஷயமாக உப்புக் குறைப்பை ஐ.நா. மன்றம் முன்னிறுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொழிற்சாலை உற்பத்தி உணவுப் பொருட்களில் உப்பின் அளவை கண்காணித்து ஒழுங்கு செய்வதற்கு செயல்திறன் மிக்க வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்.
தூள் உப்பு

நாம் வாங்கும் உணவுப் பொருட்கள் ஏற்கனவே கலந்துள்ள உப்பு தான் நம் உடம்பில் உப்பின் அளவு அதிகமா வதற்கு காரணமாக இருக்கிறது.

ஆகவே ஒருவர் தானாக முன்வந்து உப்பை குறைப்பது என்பது அவ்வளவாகப் பலன் அளிக்காது,

தாம் உருவாக்கும் உணவுப் பொருட்களில் உப்பின் அளவைக் குறைக்கச் சொல்லி உற்பத்தி நிறுவனங் களை வற்புறுத்த வேண்டும் என்று ஆராய்ச்சி யாளர்கள் சொல்கின்றனர்.

பிரிட்டனில் உள்ள வாரிக் மற்றும் லிவர்பூல் பல்கலைக் கழகம் இணைந்து இது தொடர்பான ஆய்வறி க்கையை வெளியிட் டுள்ளனர்.
உப்பினால் ஆரோக்கியம் கெடும் !

உப்பு அதிகம் சாப்பிட சாப்பிட, அதிக உப்பு இருந்தால் தான் உணவு சுவையாக இருப்பதாக நாம் உணர ஆரம்பித்து விடுவோம்.

அது நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு அதிகரித்துக் கொண்டேபோக வழிவகுத்து விடும் என இந்த ஆய்வறி க்கையைத் தயாரித்தவர் களில் ஒருவரான பேராசிரியர் பிரான்ஸிஸ்கோ கப்பூசியோ கூறுகிறார்.

உடலில் கலக்கும் உப்பின் அளவுக்கும், இரத்தக் கொதிப்பின் அளவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

இருதய நோய், வாதம், சிறுநீரகப் பாதிப்பு போன்ற வற்றின் காரணியாக இரத்தக் கொதிப்பு அமைந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)