தேவையான பொருள்கள்:
கடலை மாவு - 1கப்
அரிசி மாவு - 5 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப் பொடி - 3/4 டீஸ்பூன்
சமையல் சோடா - 2 சிட்டிகை
காய்கறி மசாலா செய்ய:
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
பொடியாக அரிந்த காய்கறித் துண்டுகள் - 3கப்
(காலிப்ளவர், உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட்)
உரித்த பட்டாணி - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 கப்
நசுக்கிய பச்சை மிளகாய் - 11/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்த மல்லித்தழை - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
லெமன் - 1
செய்முறை :
நறுக்கிய காய்கறிகளில் தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி
இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும்.
அதில் மிளகாய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். பெரிய அடுப்பில் சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
ஈரம் நன்கு வற்றி காய்கறிக் கலவை ஒன்று சேர்ந்து வரும் போது உப்பு, நறுக்கிய கொத்த மல்லி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
மசாலா நன்கு ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்யவும். சலித்த கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சோடா, மிளகாய்த் தூள் தண்ணீர் சேர்த்து கலந்து கொஞ்சம் சொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் மாவைத் தயாரிக்கவும்.
செய்து வைத்துள்ள மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் தேய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
சூடான வெஜிடபிள் போண்டா தயார்.தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.