விஷத்தை முறிக்கும், தோல்நோயை போக்கும் தேள் கொடுக்கு செடி !





விஷத்தை முறிக்கும், தோல்நோயை போக்கும் தேள் கொடுக்கு செடி !

0
பாம்பு, தேள், பூச்சி கடியால் ஏற்படும் விஷத்தை முறிக்க கூடியதும், காசநோய் கிருமிகளால் ஏற்படும் கட்டிகள், காக்காய் வலிப்பு நோய் போன்றவற்றை சரி செய்ய வல்லதும், 
தேள் கொடுக்கு செடி
தோல்நோயை போக்க கூடியதுமான தேள் கொடுக்கு செடியை பற்றி நாம் இன்று பார்க்கலாம்.

சாலை யோரங்களில் காணப்படும் தேள் கொடுக்கு செடியானது பெரிய இலைகளை கொண்டது. அழகான மெல்லிய ஊதா நிற பூக்களை உடையது.
இதன் பூ, தோடு போல் தொங்கி கொண்டிருப்ப தால் குரங்கு தோடு செடி என்ற பெயரை கொண்டுள்ளது. 

தேள் கொடுக்கு செடியின் இலை, பூ, வேர் உள்ளிட்டவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. தேள் கொடுக்கு செடியானது பாம்பு கடிக்கு மருந்தாகிறது.

இலையை மேல்பூச்சு மருந்தாக போடும் பொது தோல்நோய் சரியாகும். தேனீராக்கி குடிக்கும் போது இருமல், சளி, காசநோய் சரியாகிறது. 

தேள் கொடுக்கு செடியை மழைக் காலங்களில் அதிகளவில் பார்க்கலாம். காக்காய் மூக்கு செடி சென்ற பெயரும் இதற்கு உண்டு. 

இதன் வேரை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். வேரை சுத்தப்படுத்தி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 

அதனுடன் மிளகுப் பொடி, உப்பு மற்றும் ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் பூச்சி, பாம்பு, தேள் கடி விஷம் முறியும்.
இது பூஞ்சைக் காளான்களால் ஏற்படும் நோயை போக்கும். தேள்கொடுக்கு செடியின் காய்கள் தேள் கொடுக்கு போன்று இருக்கும். இரு கொடுக்குகளை கொண்டது. 

இது புலி நகத்தை போன்று வளைந்து இருக்கும். தேள் கொடுக்கு செடி நுண் கிருமிகளை அழிக்க கூடியது. 

இலையை பயன்படுத்தி தீக்காயங் களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலைப் பசையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சி பயன்படுத்தவும். 
தோல்நோயை போக்கும் தேள் கொடுக்கு செடி
இது தீக்காயம், ஆறாத சீல் பிடித்த புண்களை குணமாக்கும். விஷக்கடிக்கு மேல் பூச்சாக பயன் படுத்தலாம். 
தேள் கொடுக்கு செடி காயங்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. வெட்டுக்காயம் சரியாகும். தீக்காயம் வடு இல்லாமல் ஆறும்.

இலையை பயன்படுத்தி காசநோய் கிருமிகளால் ஏற்படும் கட்டிகளை சரி செய்யும் தேனீர் தயாரிக்கலாம். துளிர் இலைகள், திப்பிலி பொடி, மஞ்சள் பொடி, தேன் எடுத்துக் கொள்ளவும்.

2 அல்லது 3 இலைகளுடன் சிறிது திப்பிலி, மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

பின்னர் வடிக்கட்டி தேன் சேர்த்து குடிக்கலாம். இதனால் காசநோய் கட்டிகள் சரியாகும். 
தொண்டை வலி இருக்கும் போது 4 நாட்கள் எடுத்து வரும் போது வலி குணமாகும். ஊதா நிறப்பூக்களை பெற்றிருக்கும் தேள் கொடுக்கு செடி விஷமுறிவாகிறது. 

கழுத்து பகுதியில் திரண்டிருக்கும் கட்டிகள் கரையும். நெறி கட்டும் இடங்களில் இலையை பூசுவதால் வீக்கம் சரியாகும். 

இலையானது வலி நிவாரணி யாகவும், வீக்கத்தை குறைக்க கூடியதா கவும் இருக்கிறது. இந்த செடி காசநோய், காக்காய் வலிப்புக்கு மருந்தாகும். நோய் நீக்கியாக அமைகிறது.நன்றி: சன் டி.வி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)