நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?





நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஆனால் ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடக் கூடாது. நெல்லிக்காயில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதில் தவறில்லை தான். 

நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

அதே சமயம், குறைந்த சர்க்கரை பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிடக் கூடாது. அதிகபட்ச நன்மைக்காக தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். 

நீங்கள் தினமும் காலையில் 1-2 நெல்லிக்காய்களை சாப்பிடலாம். வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால் ஒரு நாளைக்கு 2-க்கு மேல் சாப்பிட வேண்டாம். 

ஆப்பிரிக்க ஹைனாக்கள் பற்றி தெரியுமா?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். 

ஏதேனும் நோய் அல்லது பிரச்சனை ஏற்பட்டால் இதை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகி பயன்பெறுவது நல்லது. ஊறுகாய் பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். 

இன்று உடனே செய்யக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 10

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்றவாறு

விட்டமின் டி குறைபாடு உயரத்தை பாதிக்குமா?

செய்முறை :

நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். 

புதிய உடையை அலசாமல் அணிந்தால் ஆபத்து !

பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். 

இல்லை யென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளின் மீது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத் தூவி நன்றாக பிசறி விடவும்.

வெறும் கடாயில் வெந்தயத்தைப் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்த பின் பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். 

சருமம் பளபளக்க தேவையான உணவுகள் !

ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தயப் பொடியை தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும். சூப்பரான உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி. இது 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

Tags: