பால், மஞ்சள், மிளகின் ரகசியம் தெரியுமா?





பால், மஞ்சள், மிளகின் ரகசியம் தெரியுமா?

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்ப வர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப் பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு. 
பால், மஞ்சள், மிளகின் ரகசியம்
* குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத் தூளை சேர்த்து அருந்தி வர வேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். 

* இந்த வைத்தியத்தைத் தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடை பிடிக்கிறார்கள். 

* மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். 

* பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க் கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. 

* அதே போல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவு களை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது. 

* மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும் போது, இருமல், சளி சரியாகி விடும்.
Tags: