தேவையானவை:
நறுக்கிய அகத்திக் கீரை – 2 கப்,
தேங்காய்ப் பால் – அரை கப்,
மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
கடாயில் ஒரு கப் நீர் விட்டு நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, அகத்திக் கீரையையும் சேர்த்து வேக விடவும்.
வெந்ததும், மிளகுத் தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு:
உடலின் குளிர்ச்சித் தன்மையை தக்க வைக்கும்.
இதனை தினமும் ஒரு கப் வீதம் 4 நாட்கள் அருந்தினால், வாய்ப்புண் குணமாகும்.