தேவையான பொருட்கள்:
சாமை அரிசி – ஒரு கப்,
தயிர், பால் – தலா அரை கப்,
கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிதளவு,
இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
கொத்த மல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
* இஞ்சியை தோல் சீவி துருவிக் கொள்ளவும். கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சாமை அரிசியை 10 நிமிடம் ஊற விடவும். பிறகு நீரை வடித்து விட்டு, அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
* வாணலி யில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சித் துருவல் தாளித்து தனியே எடுத்து வைக்கவும்.
* சாமை சாதத்துடன் தயிர், பால், தாளித்த பொருட்கள், கொத்த மல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.