இன்றைய அவசர உலகத்தில் சத்தான உணவென்று மிகவும் சத்து குறைந்த செயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட உணவையே உட் கொள்கிறோம்.
ஆர்கானிக் முறையில் கிடைக்கும் சத்தான சிறு தானியங் களில் செய்யக் கூடிய ருசீகர உணவை உண்டு ஆரோக்கிய மான வாழ்வை பெறலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு - 1 கப்
வெல்லம் - 2,3 அச்சு
தேங்காய் துருவல் - 1 கப்
செய்முறை :
கம்பை சுத்தம் செய்து வெறும் வாணலியில் பொன்னிற மாக வறுத்து மைய்ய அரைக்கவும்.
பின்னர்
துருவிய அச்சு வெல்லம், துருவிய தேங்காய் ஆகிய வற்றை கம்பு மாவுடன்
சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியான உருண்டை களாக
பிடிக்கவும்.
இதில் வாசனைக் காக ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இதனை காலை உணவாகவோ அல்லது தேனீர் இடை வேளைக்கோ சாப்பிடலாம்.