சூப்பரான வேலூர் பிரியாணி செய்வது எப்படி?





சூப்பரான வேலூர் பிரியாணி செய்வது எப்படி?

ஆரம்ப காலத்தில், பிரியாணி என்பது இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு செய்து உற்றார் உறவினர்களின் வீடுகளுக்கு கொடுத்து மகிழ்வார்கள். 
சூப்பரான வேலூர் பிரியாணி செய்வது எப்படி?
அதிகமாக இஸ்லாமிய சகோதர்கள் வீடுகளில் அதிகாமாக பிரியாணி செய்யும் வழக்கம் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனால், முக்குக்கு முக்கு பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப் படுவதுண்டு. 
மொத்தத்தில் பிரியாணி இன்றைய இந்தியாவின் தேசிய உணவாக மாறிவிட்டது. இத்தகைய சுவையும், மணமும் கொண்ட பிரியாணி பிறந்த இடம் பாரசீகம் ஆகும். பாலைவனங்கள் நிறைந்த பாரசீகத்தின் இன்றைய பெயர் ஈரான். 

பாரசீகர்களின் பாரம்பரிய தொழிலான குங்குமப்பூவை, அண்டை நாடுகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்வதற்காக பாலைவனங்களை கடந்து பல நாட்கள் பயணப்படும் பாரசீகர்கள் கண்டுபிடித்தது தான் பிரியாணி ஆகும். 

தேவையான பொருட்கள்

ஆட்டிறைச்சி 1 கிலோ

வெங்காயம் 1/4 கிலோ

தக்காளி 200 கிராம்

இஞ்சி விழுது 50 கிராம்

பூண்டு விழுது 50 கிராம்

பச்சை மிளகாய் 4

மிளகாய்த் தூள் 4 தேக்கரண்டி
தயிர் 200 மிலி

பட்டை 1 துண்டு

கிராம்பு 4

ஏலக்காய் 2

கொத்தமல்லித் தழை நறுக்கியது 6 மேஜைக்கரண்டி

புதினா 4 தேக்கரண்டி.

எலுமிச்சை 1 பழத்தின் ஜூஸ்

ரிஃபைண்டு கடலை எண்ணெய் 1/4 லிட்டர்

அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாசுமதி) 1 கிலோ

உப்பு தேவையான அளவு

செய்முறை
ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணைய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன்,
வேலூர் பிரியாணி செய்முறை !


நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும். 

இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும் வரை தொடர்ந்து கிளற வேண்டும். மிளகாத்தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும்.
பெப்டிக் அல்சர் அறிகுறிகளை அறிவோம் !
தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.

அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

அதில் அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேக விட வேண்டும். எலுமிச்சை சாறு விடுவதால் அரிசி உடையாது.

இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சை சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணைய் மேலே வரும்வரை சூடாக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் சன்னமாக கிளற வேண்டும்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில்
ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும்.

தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம். 'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும். அப்புறம் என்ன, வெட்ட வேண்டியது தான்!
சளித்தொல்லையா ஒழியுங்கள் கரப்பான் பூச்சியை !
குறிப்பு:

'மைக்ரோவேவ் அவன்' உள்ளவர்கள் 'தம்' போடுவதற்கு பதிலாக, மைக்ரோவேவ் பாத்திரத்தில்,

கலவையைப் போட்டு 5 நிமிடம் மைக்ரோவேவ் 'குக்' செய்தால் சுவையான, நறுமணம் கமழும் வேலூர் பிரியாணி தயாராகி விடும். பரிமாறும் அளவு 8 பேர்
Tags: