தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 200 கிராம்
கேரட் - 1
முட்டைகோஸ் - 1
பச்சைப் பட்டாணி - கால் கப்
மைதா - 1 டீஸ்பூன்
சோள மாவு - 3 டீஸ்பூன்
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
கொத்த மல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைகேற்ப
செய்முறை :
கேரட்டை துருவிக் கொள்ளவும்.
முட்டை கோஸ், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து அரைத்து கொள்ளவும்.
காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றொரு பாத்திரத்தில், துருவிய கேரட், பொடியாக வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்து வைத்த பச்சைப் பட்டாணி, மைதா, சோள மாவு, மிளகாய் தூள், மிளகுத் தூள்
மற்றும் தேவையான அளவு உப்பு ஆகிய வற்றை சேர்த்து நன்றாக மாவு போல் பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே வேக வைக்கப்பட்ட காளான் களை, இந்த கலவையால் முழுவதுமாக மூடும்படி நன்றாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்த காளான் உருண்டை களை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரித்த காளான்களை ஒரு தட்டில் வைத்து அதனை நேர்வாக்கில் இரண்டாக வெட்டி வைத்து அதன் மேல் கொத்த மல்லி தழைகளை தூவினால், சூடான, சுவையான, மொறு மொறுப்பான காளான் கோப்தா தயார்.
இதனை சாம்பார் அல்லது தயிரில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.