மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கைக்குத்தல் அரிசி !





மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கைக்குத்தல் அரிசி !

கைக்குத்தலுக்கு மாறினால் கவலை இல்லை! கைக்குத்தல் அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின்-பி குடும்பத்தைச் சார்ந்த சத்துக்கள் நிறைய உள்ளன.
இது தான் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான வைட்டமின். ஆனால், தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீட்டப்பட்ட அரிசியில் ஒரு சத்தும் கிடையாது, கிட்டதட்ட சக்கை தான்.
இன்னொரு நுட்பமான விசயம், அரிசியாக இருந்தாலும் சரி, வேறு எந்த தானியமாக... இருந்தாலும் சரி, அது தீட்டப் பட்டதென்றால் அதைச் சாப்பிடு பவர்களின் உடலில் அதிக கால்சியம் சேராது. 

இதனால் நாளடைவில் எலும்புகள் பலவீனம் அடைவதோடு, இதயத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது. தீட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நோய்களுக்கு பெரிய பட்டியலே உள்ளது. 

சர்க்கரை வியாதி, உயர் பதற்றம் (Hyper Tension), எலும்பு தொடர்பான நோய்கள் என பலவும் வரும். கைக்குத்தல் அரிசியில் நார்சத்து அதிகம் இருப்பதால், நன்கு மென்று சாப்பிட வேண்டும். 

இந்த அரிசி சாதத்தைப் பொறுத்தவரை குறைந்த அளவே சாப்பிட முடியும். அதாவது, இப்போது நாம் எடுத்துக் கொள்ளும் தீட்டப்பட்ட அரிசி சாதத்தில் பாதி அளவுக்கும் குறைவான அளவே போதுமானது.
நெல் எங்கிருந்து வந்தது?
வயிறு நிறைந்து விடும். இதனால் தான் அந்தக் காலத்து கிராமத்து ஆட்கள் நோய், நொடி யில்லாமல் நலமோடு வாழ்ந்தனர். நமக்குத் தான் கொடுத்து வைக்க வில்லையே.

கைக்குத்தல் அரிசியில் அதிகம் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் சாப்பிட்ட பிறகு, மிக விரைவில் உணவு செரிக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து குடல்  ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
தினமும் கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் அதில் செலினியம் உள்ளதால் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்ககூடிய தன்மை உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. 

அதனால் மிகவிரைவில் செரிமாணம் அடைய உதவுகிறது. மேலும் தினமும் கைக்குத்தல் அரிசி சோறு சாப்பிட்டால் இதய நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று கண்டறியப் பட்டுள்ளது.
 
கைக்குத்தல் அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இரண்டு வகை நீரிழிவு நோயை சீராக காத்துக் கொள்ள கைக்குத்தல் அரிசி பயனுள்ளதாக இருக்கிறது.
Tags: