முருங்கை விதையே போதும்... விந்தணுக்கள் அதிகரிக்கும் !





முருங்கை விதையே போதும்... விந்தணுக்கள் அதிகரிக்கும் !

0

முருங்கையின் நன்மைகள் குறித்து இன்று நேற்றல்ல நம் முன்னோர்கள் முன்பே அறிந்து வைத்திருந்தார்கள். இந்த முருங்கையை கொண்டு வைத்தியமும் செய்தார்கள். 

முருங்கை விதையே போதும்... விந்தணுக்கள் அதிகரிக்கும் !
முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கைக்காய், முருங்கை குச்சிகள் என்று அனைத்துமே பயன்படுத்தியதால் வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் இருந்தது.

முருங்கையின் மருத்துவ குணநலன்கள் குறித்து தனித்தனியாகவே எழுதலாம். 

குறிப்பாக ஆண்களுக்கு ஆண்மை குறித்த விஷயங்கள் அனைத்துக்கும் முருங்கைக்காய் இன்றளவும் உதவியாகத் தான் இருக்கிறது. இந்த முருங்கை விதைகள் தயாரிப்பும் ஆண்களுக்கு பயன்படும் விதமும் குறித்து பார்க்கலாம்.

உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய கூடியதும் செய்ய‍க் கூடாததும் !

விந்து கெட்டிப்படும் : 

முருங்கை விதையே போதும்... விந்தணுக்கள் அதிகரிக்கும் !

இந்த முருங்கை விதைகளை, நெய்யில் வறுத்துப் பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். நரம்புகள் வலுப்பெறும். 

பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். விந்தணுக்களும் அதிகரிக்கும். 

எனினும் மருத்துவர்களிடம் முறையான வழி காட்டுதலுடன் இந்த முருங்கை விதை பொடியை எடுத்து கொள்வது, ஆரோக்கியத்துக்கு மேலும் நன்மை பயக்கும். 

புற்று நோய் :

முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும். செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.

காய்கறிகள் : 

முருங்கை விதையே போதும்... விந்தணுக்கள் அதிகரிக்கும் !

விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை பிரச்சனை நீங்கி விடும். 

முருங்கை விதை, இதயத்தை பலப்படுத்தும். சர்க்கரை நோய் வந்தவர்களும், அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டிய காய்கறிகளில் முருங்கையும் ஒன்றாக உள்ளது. 

முருங்கை விதைகளை பொடி செய்து, சூப் ஆகியவற்றில் மிளகுடன் சேர்த்து சாப்பிடலாம். கால்சியம் அதிகமாக உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் உறுதித் தன்மையை தரும். 

இதயத்திற்கும் நல்லது. காரணம், இதயத்தை சுற்றி படிந்துள்ள கொழுப்புகளை அகற்றுவதில் முருங்கை விதை சூப் சிறப்பாக செயல்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 

எந்தெந்த பொருட்களை தேநீருக்கு பிடிக்காது?

இதய ஆரோக்கியம் :

முருங்கை விதையே போதும்... விந்தணுக்கள் அதிகரிக்கும் !

இதயத்தில் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. 

இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன. இதயத்தைப் பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கும்.

முருங்கை விதைகள் : 

இந்த முருங்கை விதையிலிருந்து தயாரிப்பதுதான், முருங்கை எண்ணெய். சருமத்துக்கும் கூந்தலுக்கும் நிறைய ஆரோக்கியத்தை தரக்கூடியது. 

இந்த எண்ணெயிலும், புரோட்டீன், நிறைவுற்ற கொழுப்பு போன்ற சத்துக்கள் இருக்கின்றன.. இந்த எண்ணெய்யை சமையலும் செய்யலாம். தலைமுடிக்கும் பயன்படுத்தலாம். 

சருமத்துக்கும் பயன்படுத்தலாம். முருங்கை கீரையை சாப்பிட்டால் தலைமுடி எவ்வளவு அடர்த்தியாக வளருமோ, அந்த அளவுக்கு கூந்தல் அடர்த்தியை, இந்த முருங்கை எண்ணெய்யும் தருகிறது. 

வேர்க்கால்களில் இதை பூசி வந்தால், தலைமுடிகள் பலப்படும். சரும வறட்சியை நீக்கி, ஈரப்பதத்தை தலையில் தக்க வைக்கும். 

உடல் சோர்வு :

முருங்கை விதையே போதும்... விந்தணுக்கள் அதிகரிக்கும் !

முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்த  சோகை  நீங்கும். 

பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.

சிக்னல் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் மட்டும் இருப்பது ஏன்?

முருங்கை எண்ணெய் : 

வாரம் 3 முறையாவது, இந்த எண்ணெயில் தலைக்கு மசாஜ் செய்து குளித்து வரலாம். இந்த முருங்கை எண்ணெய்யுடன் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய்யும் சேர்த்து தேய்த்தால் இன்னும் பலன் கிடைக்கும். 

இந்த எண்ணெய்யை நாமே தயாரிக்கலாம்.. முருங்கையில் உள்ள விதைகளை மட்டும் வெளியே எடுத்து, வாணலியில் கொட்டி வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். 

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, வறுத்த விதைகளை அந்த நீரில் போட்டு மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். 

பாதாம் எண்ணெய் : 

முருங்கை விதையே போதும்... விந்தணுக்கள் அதிகரிக்கும் !

அப்போது, விதைகளிலிருந்து எண்ணெய் வெளியேற துவங்கும்.. அடுப்பை குறைத்து வைத்துக் கொண்டு, அந்த எண்ணெயை மட்டும் தனியாக எடுத்து சேமித்து கொள்ள வேண்டும். 

பிறகு அவைகளை அப்படியே விட்டு விட்டு, 3 நாட்கள் கழித்து பார்த்தால், எண்ணெய் மட்டுமே தங்கி யிருக்கும். 

இந்த எண்ணெய்யை தான் நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதனுடன், பாதாம் எண்ணெய்யும் கலந்து தான் பயன்படுத்த வேண்டுமாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)