பாலக்கீரை மசால் கூட்டு இப்படி செய்து பாருங்க.. அருமையாக இருக்கும் !





பாலக்கீரை மசால் கூட்டு இப்படி செய்து பாருங்க.. அருமையாக இருக்கும் !

0

பாலக்கீரையில் வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது. 

பாலக்கீரை மசால் கூட்டு இப்படி செய்து பாருங்க.. அருமையாக இருக்கும் !
பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது. பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. 

டீசல் காரில் பெட்ரோல்? பெட்ரோல் காரில் டீசல்? என்ன நடக்கும்?

பாலக்கீரையில் போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது.

இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.

இதுவரை பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி ஒரு முறை பாலக்கீரை மசால் செய்து கொடுத்து பாருங்க.

தேவையான பொருட்கள் : .

பாலக்கீரை - 1 கட்டு

கடுகு  - 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 20 பல்

பச்சை மிளகாய் - 5

இஞ்சி  - 2 இஞ்ச்

காஷ்மீரி சில்லி பவுடர்  - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

கடலை மாவு  - 3 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்

பெருங்காய தூள் - 1 அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை - ஒன்றரை ஸ்பூன்

வெண்ணெய் - 50 கிராம்

சுவையான வாத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி?

தாளிக்க : .

கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீ ஸ்பூன்

உளுந்து - அரை டீ ஸ்பூன்

கறிவேப்லை - 1 கொத்து

பூண்டு - 15 பல்

செய்முறை : .

பாலக்கீரை மசால் கூட்டு இப்படி செய்து பாருங்க.. அருமையாக இருக்கும் !

ஒரு மிக்ஸி ஜாரில் 5 பச்சை மிளகாய் 2 இஞ்ச் வரை இஞ்சி, 20 பல் பூண்டு, ஒரு டீ ஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு ஸ்மூத் பேஸ்டாக அரைத்து கொள்ள வேண்டும். 

தண்ணீர் விரதம் நன்மை... தீமை !

ஒரு வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். பாலக்கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் அடி கனமான வாணலியில் 3 ஸ்பூன் வரை கடலை எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் சூடான பிறகு ஒரு டீ ஸ்பூன் கடுகு, அரை டீ ஸ்பூன் உளுந்து சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும். 

பின் அதில் ஒரு கொத்து கறிவேப்லையை சேர்க்க வேண்டும். இதையடுத்து ஒரு 15 பூண்டு பற்களை அதில் சேர்க்க வேண்டும். பூண்டு சிவக்கும் வரை வதக்க வேண்டும். 

இதையடுத்து அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்டை சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

பின்னர் அந்த பேஸ்ட்டின் பச்சை வாடை போன பிறகு கால் ஸ்பூன் மஞ்சள்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

அதில் ஒரு அரை ஸ்பூன் பெருங்காய தூள் மற்றும் ஒன்றரை ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சர்க்கரை கரைந்த உடன் நறுக்கி வைத்த பாலக்கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ஒரு 5 நிமிடத்தில் தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும் போது வறுத்து வைத்த ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்க்க வேண்டும். இப்படி சிறிது சிறிதாக மீதம் உள்ள மாவையும் சேர்த்து விடவேண்டும். 

இதையடுத்து கடலை மாவு போட்ட பிறகு மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வரை வேக விட வேண்டும். கெட்டி பட்டு விடாமல் கிண்டி விட வேண்டும். இதையடுத்து ஒரு 50 கிராம் வரை வெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.

சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்வது எப்படி?

வெண்ணெ உருகிய உடல் அடுப்பை அணைத்து கொள்ளலாம். சுவையான பாலக்கீரை மசால் ரெடி. இந்த மசால் சூடான, சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, நான் போன்றவற்றிற்கு அட்டகாசமான காமினேசன். 

ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கீரையை ஆசையாக சாப்பிட பழகி விடுவார்கள். இதில் எந்த கீரையை வேண்டுமானாலும் மாற்றி செய்து கொடுக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)