நாகர்கோவில் வெறும் குழம்பு செய்வது எப்படி?





நாகர்கோவில் வெறும் குழம்பு செய்வது எப்படி?

0
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு அலுத்து போய் விட்டதா? அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். 
நாகர்கோவில் வெறும் குழம்பு செய்வது எப்படி?
சைவ வகையில் இந்த சுவையான நாகர்கோவில் வெறும் குழம்பு ஒன்று. இந்த சுவையான நாகர்கோவில் வெறும் குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். 
இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கும் சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். அதனால் இன்று நாகர்கோவில் வெறும் குழம்பு செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.. 
தேவையான பொருட்கள் : . 

தேங்காய் துருவல் - 1 கப்   

மிளகாய் வற்றல் - 3  

மிளகாய் - ½ டேபிள் ஸ்பூன் 

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் 

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - ¼ கிலோ

கடுகு - 1 டேபிள் ஸ்பூன் 

வெங்காயம் - தேவையான அளவு  

புளி - தேவையான அளவு 

தண்ணீர் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 
செய்முறை : .
நாகர்கோவில் வெறும் குழம்பு செய்வது எப்படி?
நாகர்கோவில் வெறும் குழம்பு செய்ய முதலில் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், பூண்டு, மிளகாய் வற்றல், ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் அடித்துக் கொள்ள வேண்டும். 
அதன் பிறகு மிக்ஸி ஜாரில் அடித்தவற்றை புளிகரைசல் கொண்டு கலந்து கொள்ள வேண்டும். அதனை கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். 

பிறகு கரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி கொதித்ததும் மிதமான தீயில் வைக்க வேண்டும். 

சிறிது நேரம் கழித்து நுரை போல் கொதி வந்ததும் அடுப்பை ஆப் செய்து விட வேண்டும். இப்பொழுது சுவையான வெறும் குழம்பு தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)