சுவையான தீபாவளி ஸ்பெஷல் பால்கோவா செய்வது எப்படி?





சுவையான தீபாவளி ஸ்பெஷல் பால்கோவா செய்வது எப்படி?

0

தீபாவளி என்றாலே மகிழ்ச்சி நிறைந்த நாள் என்று சொல்லலாம்.. என்ன தான் கடைகளில் பல வகையான பலகாரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும். 

சுவையான தீபாவளி ஸ்பெஷல் பால்கோவா செய்வது எப்படி?
வீட்டில் செய்து சாப்பிடும் சுகமே தனி தான்.. பசும்பாலில் அனைத்து வித அமினோ அமிலங்களும் உள்ளன. ஆனால், புரதத்தின் அளவு குறைவு. 

கால்சியம், லாக்டோஸ் நிறைந்தது. இது உடலுக்குள் சென்று லாக்டிக் அமிலமாக மாறுகிறது.  

காதலனிடம் பெண்கள் கேட்க விரும்பும் 10 கேள்விகள் !

லாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. வயிற்றுப் புண்ணின் வீரியத்தைக் குறைக்கிறது.

அந்த வகையில் இந்த பதிவில் இந்த தீபாவளியை மகிழ்ச்சியாகவும்.. ஆரோக்கியமாகவும் கொண்டாட பால்கோவா செய்வது எப்படி என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.. 

தேவையான பொருட்கள்:

பால் - ஒரு லிட்டர்

சீனி (வெள்ளைச் சர்க்கரை) - 100 முதல் 150 கிராம் வரை

எலுமிச்சம் பழம் - ½ பழம் (நடுத்தர அளவு)

நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை

சுவையான தீபாவளி ஸ்பெஷல் பால்கோவா செய்வது எப்படி?

பால்கோவா தயார் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்ச வேண்டும். 

பாலினைக் காய்ச்சும் போது பாலில் கொதி வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கரண்டி போட்டு கிண்ட வேண்டும்.

பால் கொதித்ததும் கிளறும் போது (கிண்டாமல் விட்டால் பால் அடிப்பிடித்து விடும். பால்கோவாவின் சுவையும், நிறமும் மாறி விடும்.) 10 நிமிடங்கள் கழித்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட வேண்டும்.

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவது !

எலுமிச்சை ஊற்றியதும் பால் திரிந்து தண்ணீர் விடும். பாலுடன் எலுமிச்சை சாறு சேர்த்ததும் பின்னர் 10 நிமிடங்கள் சிறுதீயில் வைத்து கிளற வேண்டும்.

பிறகு வற்றியதும் நெய் சேர்த்து ஒருசேரக் கிளற வேண்டும். அவற்றில் நெய் சேர்த்த பின்னர் அதனுடன் சீனியைக் போட்டுக் கிளற வேண்டும்.

சீனியைச் சேர்த்ததும் கலவை தளதளவென வந்ததும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான பால் கோவா தயார் ஆனது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)