முளைகட்டிய பயறை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !





முளைகட்டிய பயறை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

0

பொதுவாக, முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. 

முளைகட்டிய பயறை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

பலர் காலை உணவாகவோ அல்லது நொறுக்குத் தீனியாகவோ முளைகட்டிய பயறுகளை உட்கொள்கின்றனர். அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன. 

உங்கள் நாளை நீங்கள் எவ்வாறு தொடங்குவது என்பதை பொறுத்து தான் உங்களின் அன்றைய நாள் இருக்கும். 

சரியான உணவுடன் காலை நேரத்தை துவங்கினால் மட்டுமே உங்களின் அன்றைய நாளுக்கான சுறுசுறுப்பு கிடைக்கும். காலை உணவு உயர் புரத உணவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அப்பளம் விற்ற சிறுவனுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அனுமதி !

​ஏன் முளைகட்டிய தானியங்கள் சாப்பிட வேண்டும்?

முளைகட்டிய பயறை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள், அதிக அளவு புரதச் சத்துள்ள காலை உணவு தசை ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். 

முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளும் போது, அதில் புரதங்கள், போலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன.

ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், நீண்ட காலமாக முளைகளை சாப்பிட விரும்பவில்லை. 

ஆனால் அதனை சேர்த்துக் கொள்வதற்கான சில ஆரோக்கிய வழிகளை நீங்கள் கடைபிடித்தால் இது உங்கள் உணவை சூப்பராக்குவதோடு உங்களை உற்சாகமாக்கும்.

​சிறந்த நோயெதிர்ப்பு அமைப்பு

முளைகட்டிய பயறை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். 

இந்த தானியங்களில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால், உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களுக்கு சிறப்பான சக்தி வாய்ந்த தூண்டுதல்கள் உருவாக்கப்படும். 

கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன்?

வெள்ளை அணுக்கள் தூண்டப்படுவதால், நோய்கள் மற்றும் தொற்று நோய்களை எதிர்த்து உங்களால் போராட முடியும். அத்தோடு உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும். 

முளைகட்டிய பயிரில் வைட்டமின் ஏ ஏராளமாக இருப்பதால் அவற்றில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

​சரும பளபளப்புக்கு

முளைகட்டிய பயறை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புவோர் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ள மறக்க வேண்டாம். உங்களின் சருமத்தின் ஆரோக்கியம் நீங்கள் சாப்பிடும் உணவால் தான் ஏற்படும். 

நீங்கள் அதிக அளவில் முளைகட்டிய தானியங்களை சாப்பிடுகிறீர் என்றால் உங்களின் சருமத்துக்கு தேவையான அளவு 

ஊட்டச் சத்துக்களை பெற்றுக் கொள்கிறீர் என்றால் உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

​எளிதில் ஜீரணிக்க

முளைகட்டிய பயறை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

முளைகட்டிய தானியங்களை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உங்களின் ஜீரண சக்திக்கு உதவி புரியும். 

இதில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி குடல் வழியாக விரைவில் நகர்த்த உதவும். இதனால் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்க முடியும். இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !

​மசாலா சாட் போன்று...

முளைகட்டிய பயறை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

முளைகட்டிய பயிர்கள் அல்லது தானியங்களை உண்ட பின் நீங்கள் மந்தமாகவோ அல்லது அஜீரணமாகவோ உணர்ந்தால், 

நன்றாக நீராவியில் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு நெய்யை முளைகட்டிய பயிருடன் சேர்த்துக் கொள்ளலாம்.

முடிவு

முளைகட்டிய பயறை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

பயறுகள், தானியங்களை முளைகட்ட வைப்பது மிகவும் சிரமமான காரியமல்ல. அவற்றை எட்டு முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். 

நன்கு ஊறிய பயறுகளில் தண்ணீரை வடித்து விட்டு, அவற்றைப் பருத்தித் துணியில் கட்டி தனியாக வைத்து விட வேண்டும். அடுத்த 12 மணி நேரத்துக்குள் அவை முளைகட்ட ஆரம்பித்து விடும். 

பெரும்பாலும் இவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். சுவையாக இருக்கும். 

பச்சை வாசனை பிடிக்காதவர்கள், வாணலியில் சிறிது எண்ணெய்யைக் காய வைத்து அதில் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, முளைகட்டிய பயறையும் சேர்த்து கிளறி உடனே இறக்கி விட வேண்டும். 

கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?

முளைகட்டிய பயறுகளை அதிகம் வேக வைப்பதோ அல்லது பொறிப்பதோ அவற்றில் உள்ள சத்துகளைச் சிதைத்து விடும்.

முளைகட்டிய பயறுகள், தானியங்களின் செரிமானம் தாமதப்படும் என்பதால் வயிற்றுக்கோளாறு உள்ளவர்களும் வயதானவர்களும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இவற்றை உட்கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)