பருப்பு இல்லாமல் டிபன் சாம்பார் செய்வது எப்படி?





பருப்பு இல்லாமல் டிபன் சாம்பார் செய்வது எப்படி?

0

தலைப்பை பார்த்த பலருக்கும் ஷாக்கிங்காக இருந்து இருக்கும். அதிலும் புதுசாக சமையல் கற்றுக் கொள்பவர்கள், பருப்பு இல்லாமல் எப்படி சாம்பார்? என யோசிப்பீர்கள். 

பருப்பு இல்லாமல் டிபன் சாம்பார் செய்வது எப்படி?
உண்மை தான் இந்த வகையான சாம்பார் கிராமத்தில் இருக்கும் டிபன் சென்டர்களில் படு ஃபேமஸ். இட்லி, தோசைக்கு இந்த சாம்பாரை தந்தால் ஊற்றி சாப்பிடுவார்கள். 

சொல்லப்போனால் டேஸ்டில் சாம்பாரை விடவும் ஒருபடி மேலே ருசியாக இருக்கும். 

மனைவியின் அழகை ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களா ஆண்கள்?

திடீரென்று காலை சமையல் அல்லது இரவில் டிபனுக்கு சாம்பார் செய்ய நினைக்கும் போது பருப்பு வீட்டில் இல்ல என்றால் உடனே இந்த வகை சாம்பாரை ட்ரை செய்து பாருங்கள். 

கட்டாயம் அவசரத்திற்கு உதவும் டேஸ்டிலும் கைக்கொடுக்கும்.சரி இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

தக்காளி, 

வெங்காயம், 

பச்சை மிளகாய், 

மஞ்சள் தூள், 

கடுகு, 

எண்ணெய், 

கறிவேப்பிலை,

பெருங்காயம், 

உப்பு, 

கடலை மாவு, 

கொத்தமல்லி.

ஏன் சோளம் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது?

செய்முறை :.

பருப்பு இல்லாமல் டிபன் சாம்பார் செய்வது எப்படி?

முதலில் குக்கரில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அதில் 5 விசில் நன்கு வேக வைத்து கொள்ள் வேண்டும். வெந்த கலவையை மசித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காந்த மிளகாய், சேர்த்து தாளித்து அதில் வேக வைத்த கலவையை சேர்க்க வேண்டும்.

தொடையிடுக்கில் வரும் கருமை நிறத்தை போக்க?

இப்போது தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து வரும் போது, 2 ஸ்பூன் கடல மாவை அதில் சேர்க்க வேண்டும்.

மாவு நன்கு கரைந்து கெட்டி பதத்திற்கு வந்த பின்பு இறுதியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சூப்பரான டேஸ்டியான பருப்பே இல்லாமல் டிபன் சாம்பார் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)