சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?





சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?

0

கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறக்க முடியும். 

சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?
வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும். 

புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. 

வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும். 

ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது. 

இந்த சத்துக்குறைபாடு வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நீங்க பெறலாம். சரி இனி வெண்டைக்காய் கொண்டு சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

கல்லீரலில் கொழுப்பு படிதல் !
தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - ¼ கிலோ

கரம் மசாலா - ½ டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 5

பூண்டு - 5 பல்

மல்லி துாள் - 1 டீஸ்பூன்

மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் துாள் - ½ டீஸ்பூன்

கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு - 10

சீரக துாள் - ½ டீஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

செய்முறை

சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?

வெண்டைக்காயை சுத்தமாக கழுவி, நீர் துடைத்து விட்டு, சற்று பெரிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும். முந்திரி பருப்பு அரை மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
மூலநோய் வெளிக்காட்டும் அறிகுறிகள் !

அகலமான பாத்திரத்தில், உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், கரம் மசாலா, மல்லி துாள், சீரக துாள் சேர்த்து, சில துளிகள் நீர் தெளித்து கலந்து கொள்ளவும்.

இதில், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், நீரை வடித்து விட்டு முந்திரி, ஒன்றிரண்டாகத் தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கலந்த பின், 

கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு சேர்த்து, பக்கோடாவிற்கு பிசைவது போல பிசையவும்.

எதையும் நொறுக்கி விடாமல், மசாலா சீராக கலக்கும் விதமாக மென்மையாக பிசையவும். அதன் பின், நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து பிரட்டி,

விக்கல் நிறுத்த செய்ய வேண்டியது !
சில நிமிடங்கள் வைத்து, எண்ணெய் காய்ந்ததும், பிரட்டி வைத்த வெண்டைக்காயை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

நன்கு ஆறிய பின் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால், மொறு மொறுவென்று இருக்கும். இப்போது சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா ரெடி. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)