5,000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கேரட் சாப்பிட்டு வருகின்றனர். இந்த காய் மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தோன்றியது.
ஆரம்பத்தில் ஊதா மற்றும் மஞ்சள் வண்ணங்களில் மட்டுமே கிடைத்த கேரட் நமக்குப் பழக்கமான ஆரஞ்சு நிறத்தில் 1600 களில் இருந்து தான் உருவாக்கப்பட்டது.
இன்று ஆராய்ச்சியாளர்கள் கேரட்டை மஞ்சள், பிரகாசமான சிவப்பு மற்றும் அடர் ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் உற்பத்தி செய்கிறார்கள்.
ஆனால் கவனத்தை ஈர்ப்பது என்னவென்றால், முக்கியமான நன்மைகளை வழங்கும் கேரட்டில் உள்ள நிறமிகளின் தொகுப்பு (1) எனலாம்.
இனிப்பான சுவை கொண்ட கேரட் அதன் குணத்திலும் இனிமையானது. இதில் அளவிட முடியாத நன்மைகள் நிரம்பி உள்ளன.
இதில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் மேலும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
கை விரல்களை தேய்த்தால் முடி வளரும் !
கேரட்டை உண்பதால் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், ஆற்றலை அதிகரித்தல்,
எலும்புகளை உறுதியாக்குதல், உடலுக்குத் தேவையான புரதம் கொடுத்தல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.