செலரி விதைகளில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், தாய்ப்பால் சுரப்பைத் தூண்டி,
நரம்பு மண்டல இயக்கத்தை சீராக்கக் கூடியவை. தலைவலியையும் விரட்டும் சக்தி கொண்டவை.
சரி இனி செலரி கொண்டு அருமையான செலரி பிரியாணி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப்,
செலரி - 100 கிராம்,
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3,
கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் உள்ளிட்ட காய்கறிக் கலவை - 1 கப்,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - சிறிது,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
பாதாம் - 4,
வறுப்பதற்கு வெங்காயம் - அரை கப்,
குங்குமப் பூ - சிறிது,
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் - 3 கப்.
ஹரியாலி சமோசா செய்வது எப்படி?
செய்முறை:
காய்கறிகளைச் சேர்த்து வதக்கி, காய்கறி வேக வைத்த தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது ஏற்கனவே அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியைச் சேர்க்கவும்.
அரை டீஸ்பூன் பாலில் கரைத்த குங்குமப் பூவை அதில் கொட்டவும். உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைத்து வேக விடவும்.
கேக் செய்ய பேக்கிங் ஓவன் தேவையில்லை குக்கரில் செய்வது எப்படி?
இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு சீவிய பாதாம், வெங்காயம் சேர்த்து வறுத்துப் பரிமாறவும்.