பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !





பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !

0

சிவப்பு பருப்பு அல்லது மைசூர் பருப்பு எனும் இந்த பருப்பில் (MASOOR DAL) சத்தான கூறுகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. 

பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !
மைசூர் பருப்பு பல ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ பண்புகளைக் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றிலுள்ள கலோரிகள் மற்றும் புரதங்கள் தனித்துவமான கலவையாக கருதப் படுகிறது. 

இது ஆரோக்கியமான மற்றும் சரியான ஊட்டச்சத்தை வழங்குவதில் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதன் மூலம் பல மருத்துவ பண்புகளை பெற முடியும். 

மைசூர் பருப்பு சாம்பார் பலரின் நாவிற்கு சுவை சேர்க்கும் ஒரு உணவாகும். இந்த மந்திர மூலப்பொருள் புரதம், பலவகை வைட்டமின் மற்றும் மினரல்கள் ஆகியவற்றை தன்னுள் கொண்டது. 

கேரட் பச்சையாக சாப்பிடுவதன்தால் கிடைக்கும் நன்மைகள் !

சரும நிறமிழப்பு, பரு, சுருக்கம், கருவளையம் என்று பல்வேறு வகையான சரும பிரச்சனைக்கும் இந்த மைசூர் பருப்பு சிறந்த ஒரு தீர்வைத் தருகிறது.

ஆனால் இந்த மைசூர் பருப்பை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது என்ற ஒரு கேள்வி எழும். இதனை ஒரு பேஸ்பேக்காக பயன்படுத்தலாம். 

மைசூர் பருப்பு பயன்படுத்தி சருமத்திற்கு எப்படி பொலிவை அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவை படித்து அறிந்து  கொள்ளுங்கள்.

மைசூர் பருப்பு மற்றும் பால்

பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !

எல்லா அழகுக் குறிப்புகளும் ஸ்க்ரப் செய்வதில் இருந்து தொடங்கப்படுகின்றன. 

வீட்டிலேயே மிக எளிதான முறையில் ஸ்க்ரப் செய்வது எப்படி என்பதை இப்போது அறிந்து கொள்வோம். உங்களுக்கு தேவையான பொருட்கள் பால் மற்றும் மைசூர் பருப்பு.

தீபாவளி ஸ்பெஷல்.. பிரட் ட்ரை குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

ஒரு ஸ்பூன் மைசூர் பருப்பை எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை ஊறிய பருப்பை எடுத்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

இந்த விழுதுடன் ஒரு ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த விழுதை உங்கள் சருமத்தில் தடவவும். இப்போது இந்த ஸ்க்ரப் தயார்.

இந்த ஸ்க்ரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை பொலிவாக்கி புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

பொலிவான சருமத்திற்கு

பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !

சருமம் எந்த ஒரு களங்கமும் இல்லாமல் இருந்த போதிலும், சோர்வாகவும் புத்துணர்ச்சி இல்லாமலும் இருக்கலாம். 

உங்கள் முகத்தை புகைப்படம் எடுத்தால் நீங்கள் இந்த உணர்வை பெறலாம். இதற்கான தீர்வு இதோ. இது மைசூர் பருப்பு பேஸ் மாஸ்க் ஆகும்.

100 கிராம் மைசூர் பருப்பை இரவு முழுவதும் பாலில் ஊற வைக்கவும். மறுநாள் காலை இந்த பருப்பை அரைத்து விழுதாக்கவும். இதனை உங்கள் முகத்தில் தடவவும்.

மூட்டைப் பூச்சிக்கு பிடித்த நிறம் என்ன? தெரியுமா?

இருபது நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். உடனடியாக உங்கள் முகத்தில் ஒரு பொலிவைக் காணலாம். 

இப்போது புகைப்படம் எடுத்துப் பார்க்கும் போது உங்களால் ஒரு வித்தியாசத்தை உணர முடியும்.

இப்படி பல மந்திர மாற்றங்களை உங்கள் முகத்திற்குக் கொண்டு வரும் சக்தி மைசூர் பருப்பிற்கு உண்டு. 

இதே போல் பல இயற்கை பொருட்கள் மூலம் உங்கள் முகத்தை மேலும் பொலிவாகவும் அழகாகவும் மாற்றலாம். முயற்சி செய்து பாருங்கள். நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

பருக்களைப் போக்க

பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !

பருக்களைப் போக்க நீங்கள் பயன்படுத்தும் வழக்கமான பேஸ் பேக்குடன் சேர்த்து மைசூர் பருப்பை உபயோகிக்கலாம். 

கடலை மாவு, தயிர், மற்றும் மஞ்சள் கலவை வழக்கமாக அனைவராலும் பின்பற்றப்படும் பருக்களைப் போக்கும் ரெசிபி ஆகும்.

மரணத்திற்கு பிறகு இயற்கை இரக்கம் காட்டப் போவதில்லை... படிங்க !

இந்த விழுதுடன் சிறிதளவு மைசூர் பருப்பு விழுதை சேர்த்து உங்கள் முகத்தில் தடவவும். 

இந்த விழுது முகத்தில் காய்ந்தவுடன், கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த பேக்கை பயன்படுத்துவதால் பருக்கள் மறைந்து விடும்.

மைசூர் பருப்பு ஃபேஸ் பேக்

பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !

சரும நிறமிழப்பை கட்டுப்படுத்தி நிறத்தை மேம்படுத்த மைசூர் பருப்பு பேஸ் பேக் பயன்படுகிறது.

உங்கள் சருமத்தில் கருந்திட்டுக்கள் காணப்பட்டு சருமத்தின் நிறத்தில் சமச்சீரற்ற தன்மை உள்ளது 

தஞ்சைப் பெரிய கோயில் ஆழ்துளைக் கிணறு, வழிபாட்டு முறை மாற்றம் !

உங்களுக்கு பிரச்சனையாக உள்ளதா? இதனை களைவதற்கு ஒரு எளிய தீர்வு உள்ளது. அதனை இப்போது பார்க்கலாம்.

மைசூர் பருப்பு தூள் மற்றும் தேன் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொள்ளவும்.

இந்த பருப்பு தூளை முன்னர் கூறிய முறையில் தயாரிக்கலாம் அல்லது கடைகளில் கூட பருப்பு தூள் கிடைக்கிறது.

மைசூர் பருப்பு தூளுடன் சிறிதளவு தேன் சேர்த்து ஒரு அடர்ந்த கலவையை தயார் செய்து அதனை உங்கள் முகத்தில், கழுத்தில் மற்றும் நிறமிழப்பு உள்ள இடங்களில் தடவவும்.

காயும் வரை அப்படியே வைத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். இயற்கை தீர்வுகள் மிக விரைவில் பலன் தராது. 

எமர்ஜென்சி என்றால் என்ன?

ஆனால் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் நிச்சயம் பலன் கிடைக்கும். எனவே, வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தி வரவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)