கல்யாண முருங்கை தோசை செய்வது எப்படி?





கல்யாண முருங்கை தோசை செய்வது எப்படி?

0
முருங்கையை வீட்டுக்குப் பின்னாலும், கல்யாண முருங்கையை வீட்டுக்கு முன்னாலும் வளர்ப்பார்கள். பெண்மையைப் போற்றக் கூடிய மிகச் சிறந்த உணவு கல்யாண முருங்கை. 
கல்யாண முருங்கை தோசை செய்வது எப்படி?
இது, பெண்களுக்கான மாத விடாய்க் கோளாறுகளைச் சரி செய்யும். மாதவிடாய் சுழற்சியைச் சீராக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும். 
ஆண்களுக்குச் சளியைக் குணப்படுத்தும். சைனஸ் மற்றும் தலை வலியைத் தீர்க்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். புளித்த ஏப்பத்தைச் சரி செய்யும்.

இதை, தோசையாகவும் சாப்பிடலாம். இதை வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று தோசை என அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்

இட்லிஅரிசி - 1 கப்

கடலைபருப்பு - 4 ஸ்பூன்

கல்யாண முருங்கை இலை - 1 கட்டு

உப்பு - தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 4

பெருங்காயம் - சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

ஆண்கள் வயதுக்கு வரும் அறிகுறி என்ன? எப்படி தெரிந்து கொள்வது?

செய்முறை

கல்யாண முருங்கை தோசை செய்வது எப்படி?

கல்யாண முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கீரையை சுத்தம் செய்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும்.

பச்சரிசி, இட்லி அரிசி, கடலைபருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District

பின்னர் கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும். பாதி அரைந்ததும் சுத்தம் செய்த கீரை, வற்றல், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.

அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் 

மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சத்தான கல்யாண முருங்கை தோசை ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)