பள்ளிபாளையம் காளான் பிரை செய்வது எப்படி?





பள்ளிபாளையம் காளான் பிரை செய்வது எப்படி?

0

தமிழ்நாட்டில் பள்ளிப்பாளையம் ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானது. பள்ளிப்பாளையம் என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. 

பள்ளிபாளையம் காளான் பிரை

இந்த பள்ளிப்பாளையம் ரெசிபிக்களில் காளான் ப்ரை மிகவும் சூப்பராக இருக்கும். 

பள்ளிப்பாளையம் காளான ப்ரை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். 

குறிப்பாக இந்த காளான் ப்ரை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பள்ளிப்பாளையம் காளான் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் - 5

கறிவேப்பிலை - சிறிது

சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

தக்காளி - 1 (நறுக்கியது)

தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

பள்ளிபாளையம் காளான் பிரை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், 

கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கிய காளான் மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். 

பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

காளான் நன்கு வெந்ததும், இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத் தூள் தூவி இறக்கினால், சுவையான பள்ளிப்பாளையம் காளான் ப்ரை தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)