இட்லி மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வெண்டும்?





இட்லி மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வெண்டும்?

0

பரபரப்பான வாழ்க்கை முறையில் இன்ஸ்டண்ட் விஷயங்கள் வாழ்க்கையை இன்னும்  எளிதாக்குகின்றன. 

இட்லி மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வெண்டும்?

அந்த வகையில் சமையலறையில் நீண்ட நேரம் நிற்க விரும்பாத பலர் இன்ஸ்டண்ட் பொடி, இன்ஸ்டண்ட் சட்னி, தோசை, இட்லி மாவு அரைத்து வைத்துக் கொள்வார்கள்.

இவை காலை மற்றும் இரவில் டிஃபன் செய்து கொள்ள எளிமையாக இருக்கும். 

அப்படி வேலைக்குச் செல்லும் பலர் வீக் எண்ட் சமயங்களில் இட்லி , தோசை மாவை ஒரு வாரத்திற்கு தேவையான அளவு அரைத்து வைத்துக் கொள்வார்கள்.

இட்லி மாவு அதிக நாட்கள் வரை புளிக்காமல் பதபடுத்துவது என்பது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கும். 

என்ன தான் முயற்சி செய்து மெனக்கெட்டால் கூட ஓரிரு நாட்கள் தான் புளிக்காமல் இருக்கும். பிறகு மூன்றாவது நாளே அதிகம் புளித்துப் போய் தோசை தான் சுட வேண்டி இருக்கும். 

அவ்வாறு இல்லாமல் ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் அப்படியே பிரஷ்ஷாக வைத்திருப்பது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அப்படி அரைக்கும் மாவு 3 நாட்கள் நன்றாக இருக்கும் அதன் பின் நன்கு புளித்து விடும். கஷ்டப்பட்டு அரைத்து அதை கீழே கொட்டவும் மனம் வராது. 

இட்லி மாவு புளிக்காமல் அப்படியே பிரஷ்ஷாக வைத்திருப்பது எப்படி?

எனவே இதை தவிர்க்க சூப்பரான டிப்ஸ் இருக்கு. அதாவது இட்லி அரிசி மற்றும் உளுந்து தயார் செய்து கொள்ளுங்கள். 

அரிசியை 4 மணி நேரம் ஊற வையுங்கள். உளுந்து 1 மணி நேரம் ஊற வைத்தால் போதும். அதோடு வெந்தயம் கொஞ்சம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு முன்னர் ஒரு முறை நன்கு கழுவி வைத்து விடுங்கள். அடிக்கடி மாவு அரைப்பவர்கள் கழுவுவது இல்லை. 

நாம் என்ன தான் போன முறை கழுவி வைத்தாலும் அதன் புளிப்புத்தன்மை கிரைண்டரில் ஒட்டியிருக்கும். கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும். 

குறைந்தது அரிசி மற்றும் உளுந்து 3 மணி நேரமாவது ஊற வேண்டும். அதற்கு குறைவாக ஊறினால் புளித்து போக வாய்ப்பு உள்ளது.

அதன் பிறகு உளுந்தை போட்டு நீங்கள் அரைக்கும் பொழுது கைபடாமல் தண்ணீர் இடையிடையே தெளித்து தெளித்து ஒரு பிளாஸ்டிக் கரண்டி அல்லது மரக்கரண்டி எடுத்து தள்ளி தள்ளி விட்டு அரைக்கலாம். 

கைபடாமல் தண்ணீர் தெளித்து பிளாஸ்டிக் கரண்டி கொண்டு தள்ளி விட்டு அரைக்கலாம்.
கையை மட்டும் உபயோகப்படுத்த வேண்டாம். அதற்கு தேவையான தண்ணீரை சேர்க்க ஐஸ் வாட்டர் பயன்படுத்துங்கள். 

உளுந்து அரைத்து முடித்ததும், கைகளை ஒரு முறை நன்கு சுத்தம் செய்து விட்டு உளுந்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

இந்த இடத்தில் மட்டும் தான் நாம் கையால் மாவை எடுப்போம். மாவு புளிக்காமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் உபயோகிப்பது சிறந்த தேர்வாக இருக்கும். 

எவர்சில்வரை விட பிளாஸ்டிக்கில் மாவை எடுத்தால் விரைவில் புளிப்பது இல்லை.

ஆம், நீங்கள் எப்படி அரிசி முன்கூட்டியே ஊற வைத்து தயார் செய்கிறீர்களோ அதே போல் ஐஸ் வாட்டரையும் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின் அரிசியை போட்டு நீங்கள் வழக்கம் போல் எப்படி தண்ணீர் ஊற்றி அரைப்பீர்களோ அதே போல் ஊற்றி அரைக்க வேண்டும். 

இப்போதும் ஐஸ் வாட்டரை மட்டும் பயன்படுத்துங்கள். உளுந்தை விட அரிசி சீக்கிரம் அரைபட்டு விடும். அரிசி அரை பட 15 நிமிடமே போதுமானது. 

உளுந்தை விட அரிசி சீக்கிரம் அரைபட்டு விடும்.

அரிசி அரைந்து முடிந்ததும் மாவை எடுக்காமல் கிரைண்டரில் ஏற்கனவே நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த உளுந்தையும் அரிசியுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அளவிற்கு ஆட்டி எடுக்க வேண்டும். 

இவ்வாறு செய்வதால் அரிசியையும், உளுந்தையும் தனித் தனியாக எடுத்து ஒன்றாக சேர்த்து கைகளால் கலந்து விட வேண்டிய அவசியமில்லை. 

கிரைண்டரிலேயே நன்கு கலந்து சூப்பராக வந்து விடும். இப்போது ஐந்து நிமிடம் ஆன பிறகு கிரைண்டரை தனியே எடுத்து மாவு ஸ்டோர் செய்யும் பாத்திரத்தில் அப்படியே கவிழ்த்து கை வைக்காமல் கொட்டிக் கொள்ளுங்கள். 

முழுவதுமாக நம்மால் கைகள் படாமல் எடுக்க முடியாது. அதனால் கடைசியில் இருக்கும் சிறிதளவு மாவை அப்படியே விட்டு விடுங்கள். 

பாத்திரத்தில் எடுத்த மாவை உப்பு சேர்க்காமல் மூடி வைத்து ஃப்ரிட்ஜில் அப்படியே எடுத்து வைத்து விடுங்கள்.

மீதமிருக்கும் மாவை தனியே ஒரு பாத்திரத்தில் கைகளால் நான்கு சுத்தமாக எடுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். 

உப்பு சேர்க்காமல் மூடி வைத்து ஃப்ரிட்ஜில் அப்படியே எடுத்து வைத்து விடுங்கள்.

மாவு புளிப்பதற்கு சுமார் 8 மணி நேரமாவது ஆகும். இந்த மாவை மறுநாள் காலையில் இட்லி சுட்டால் சூப்பராக மெத்தன பஞ்சு போல் இட்லி வரும்.

ஃப்ரிட்ஜில் இருக்கும் ஸ்டோர் செய்து வைத்த மாவை உங்களுக்கு எப்போது தேவையோ, அப்போது மட்டும் வெளியே எடுத்து வைத்து உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம். 

நீங்கள் உபயோகப்படுத்துவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே வெளியே எடுத்து வைத்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு தேவையான அளவிற்கு மாவு புளிக்கும். 

நாம் சுத்தமான முறையில் கை படாமல் உப்பு சேர்க்காமல் அரைத்து எடுத்து வைத்ததால் மாவு அவ்வளவு சீக்கிரமாக புளிக்காது. 

ஒரு வாரத்திற்கு மேல் ஆனாலும் புளிக்காமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். இந்த முறையில் நீங்கள் ஒரு முறை மாவு அரைத்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

சரி இப்போது மாவு புளித்து ஆகி விட்டது, அதை சரி செய்ய என்ன செய்வது? 

புளித்த மாவில் சிறிதளவு அரிசி மாவு அல்லது பால் சேர்த்து தோசை வார்த்தால் அந்த அளவிற்கு புளிப்பு உங்களுக்கு தெரியாது. சாப்பிட நன்றாக இருக்கும். 

புளிக்காத அருமையான தோசை நமக்கு கிடைத்து விடும்

அதிகம் புளித்த மாவில் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிறிதளவு வெங்காயம், பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 

இவற்றை போட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து தோசை வார்த்தால் வித்தியாசமான சுவையில் புளிக்காத அருமையான தோசை நமக்கு கிடைத்து விடும்.

குறிப்பு : 

உளுந்து ஆட்டும் போதும் ஐஸ் வாட்டரை மட்டும் பயன்படுத்துங்கள்.

அரிசி ஆட்டும் போதும் தேவையான தண்ணீரை சேர்க்க ஐஸ் வாட்டரை மட்டும் பயன்படுத்துங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)