சீனித் துளசி என்றால் என்ன? சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி !





சீனித் துளசி என்றால் என்ன? சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி !

0

சர்க்கரைக்கு மாற்றாக அதுவும் பெருவாரியான மக்களை பாடாய்ப்படுத்தி வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பதே இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி.

சீனித் துளசி என்றால் என்ன?
`ஸ்டீவியா ரியோடியானா’ எனப்படும் இந்த சீனித்துளசியின் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. 

லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் அதிகமாகக் காணப்படும் இந்தச் செடி சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தது.

சீனித் துளசியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) போன்ற வேதிப்பொருள்களே இனிப்புத் தன்மைக்கு முக்கியக் காரணமாகும்.

கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகமாக இனிப்புத் தன்மை கொண்டிருந்தாலும் மிகக்குறைந்த சர்க்கரை மற்றும் மாவுச்சத்து கொண்ட பொருட்களே இதில் உள்ளன.

சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுத்தப்படும் இந்த சீனித் துளசி உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்படுகிறது. 

சீனித் துளசியில் சர்க்கரை இயற்கையாகக் காணப்படுவதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாகப் பயன்படுத்தலாம். 

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி !

இதன் இலைகளை காய வைத்துப் பொடியாக்கி டீயாக விற்கப்படுகிறது.

இப்பயிரில் இருந்து எடுக்கப்படும் 'ஸ்டீவியோ சைட், ரிபோடிசைட்' எனும் பொருள் சர்க்கரைக்கு மாற்றாக 

மிகக்குறைந்த அளவு சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த துளசி நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. 

இதில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம். ஆனாலும், குறைந்த அளவு சர்க்கரை, மாவுச் சத்துகளைக் கொண்ட பொருள்களே இதில் உள்ளன. 

குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனிப்புச்சுவை கொண்டது; சர்க்கரை (சீனி), வெல்லத்தைவிட பலமடங்கு இனிப்புச்சுவை உடையது. 

ஆனாலும் இதைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது; சர்க்கரைநோய் ஏற்படவும் வாய்ப்பிலை. 

வெல்லத்தைவிட பலமடங்கு இனிப்புச்சுவை உடைய சீனித் துளசி

இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்பது தான் இதன் சிறப்பு. சீனித்துளசி சர்க்கரையில் கார்போஹைட்ரேட்டின் அளவு ஜீரோ அளவில் இருக்கிறது. 

இதனால் சர்க்கரையின் அளவில் எந்தப் பிரச்னையும் இருக்காது. மாறாக வெள்ளைச் சர்க்கரையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உணவு எளிதில் செரிமானமாகாது.

ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாகும், கொழுப்பு உருவாகும். இதனால், உடல் பருமன், இதயநோய் பாதிப்புகள் ஏற்படும். 

இதே போல், வெள்ளைச் சர்க்கரையில் சோடியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். 

இது சர்க்கரை நோயை மட்டுமல்லாமல் மற்ற நோய்கள் வருவதற்கும் காரணமாகி விடும். சீனி துளசியில் தேவையான பொருள் இலைகள் மட்டுமே. 

பூக்கள் பூத்தால் செடியின் வளர்ச்சி நின்று விடும். பூக்கள் தென்படும் போதெல்லாம் நுனியை கிள்ளி பூக்களை எடுத்து விட்டால் செடி செழித்து வளரும்.

துளசி என்றாலே மகத்துவம் வாய்ந்தது என்று தான் பொருள்
சிறந்த முறையில் பராமரித்து வந்தால் 3 முதல் 5 ஆண்டு தொடர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும். 

கிளைகளை பூமியிலிருந்து 10 முதல் 15 செ.மீ., உயரத்தில் வெட்டி எடுத்த பின் இலைகளை பிரித்து கொள்ளலாம். 

ஆண்டிற்கு நான்கு முறை அறுவடை செய்யலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. துளசி என்றாலே மகத்துவம் வாய்ந்தது என்று தான் பொருள். 

ஆனால், இந்தச் செடிகளை கவனமாகப் பராமரிக்க வேண்டும்.  2 அடி முதல் 3 அடி உயரம் வளரக்கூடிய இத்துளசி, இயற்கை உரம் மற்றும் மக்கிய தொழு உரத்தில் மட்டுமே வளரும். 

இது மிட்டாய் இலை, இனிப்பு இலை மற்றும் சர்க்கரை இலை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

சீனித் துளசியின் பயன்கள்

சீனித் துளசியின் பயன்கள்

மிகக் குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட சர்க்கரை உணவான இது ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடியது.

இதய நோயைக் குணப்படுத்தும் மருந்துகளிலும் சீனித் துளசி சேர்க்கப்பட்டுள்ளது.

செரிமானக் கோளாறுகளை சீராக்கும் இது அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

தோல் நோய்களைத் தீர்க்கும் மருந்துகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)