கம்பு சேமியா வித் ஸ்வீட் கார்ன் டிலைட் செய்வது எப்படி?





கம்பு சேமியா வித் ஸ்வீட் கார்ன் டிலைட் செய்வது எப்படி?

0

நொறுக்குத் தீனி பிரியர்கள் பலருக்கு, இப்பழக்கம் நம் ஆரோக்கியத்தை நொறுக்கி விடுமோ என்ற பயம் இருக்கும். 

கம்பு சேமியா வித் ஸ்வீட் கார்ன் டிலைட் செய்வது எப்படி?
அப்படி பயம் ஏதும் இல்லாமல் சாப்பிடக்கூடிய ‘ஸ்நாக்ஸ்’, ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்புச் சோளம். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கண் பார்வை, சருமத்துக்கு நலம் பயக்கக்கூடியவை. 

ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி1 ஞாபகசக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதே போல, கார்ன் ஆயிலில் இருக்கும் அதிகப்படியான ஒமேகா 6 பேட்டி ஆசிட், நம் மூளையின் செயல் பாடுகளுக்கும் உடல் நலத்துக்கும் மிகவும் நல்லது.

இந்த ஸ்வீட் கார்ன் உடன் கம்பு சேமியா கலந்து எப்படி ஒரு அருமையான டிஸ் செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை :

கம்பு சேமியா - 200 கிராம்,

பச்சைமிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,

வேக வைத்த இனிப்பு சோள முத்துக்கள் - 1 கப்,

உப்பு - தேவைக்கு,

சர்க்கரை - 1/4 டீஸ்பூன்.

தாளிக்க...

கடுகு - 1/2 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - 10 இலைகள்.

செய்முறை :

கம்பு சேமியா வித் ஸ்வீட்கார்ன் டிலைட்

சுடுநீரில் உப்பு, எண்ணெய் கலந்து கம்பு சேமியாவை சேர்த்து வடிகட்டி அலசி உதிர்க்கவும். 

கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். 

வேக வைத்த சோள முத்துக்கள், உதிர்த்த சேமியா, கறிவேப்பிலை, சர்க்கரை சேர்த்து கிளறி பரிமாறவும்.

கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம்  வகிக்கிறது.

தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது.  

அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது. 

கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம். 

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே  செய்து வந்தார்கள். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)