குழந்தைகளுக்கு பிடித்த கேரட் - பீன்ஸ் சாதம் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்த கேரட் - பீன்ஸ் சாதம் செய்வது எப்படி?

0

குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும். கேரட், பீன்ஸை சாதத்துடன் சேர்த்து வெரைட்டி ரைஸாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். 

குழந்தைகளுக்கு பிடித்த கேரட் - பீன்ஸ் சாதம்
தேவையான பொருட்கள் :

தக்காளி விழுது (பியுரி) - 1/2 கப்

அரிசி - 3/4 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

கேரட் - 2

பீன்ஸ் - 5 கிராம்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பீன்ஸ், கேரட்டை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெயை விட்டு சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதனுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். வதங்கியதும் தாக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விட்டு

ஊற வைத்த அரிசியையும் சேர்த்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி போட்டு 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும். சூப்பரான குழந்தைகளுக்கு சத்தான கேரட் - பீன்ஸ் சாதம் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)