அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் வழங்கும் சில இயற்கை வழிகள் !





அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் வழங்கும் சில இயற்கை வழிகள் !

0

பொதுவாக உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. சில சமயங்களில் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும்.

அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் சில இயற்கை வழிகள் !
அப்படி அதிகமாக சுரந்தால் இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது.  இவ்வாறு வயிற்றில் ஏற்படும் எரிச்சலைத் தான் அசிடிட்டி (acidity) என்று சொல்வார்கள்.

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது அசிடிட்டி பிரச்சனையால் அவஸ்தைப் பட்டிருப்போம். இத்தகைய அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. 

அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, 

அதிகமாக புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. 

மேலும் காலை உணவை தவிர்ப்பது, வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அசிடிட்டியை ஏற்படுத்தக் கூடியவையே.

இந்த அசிடிட்டி பிரச்சனைக்கு என்ன தான் கடைகளில் மருந்துகள் விற்கப்பட்டாலும், இயற்கை வழிகளின் மூலம் மிகவும் வேகமாக சரி செய்யலாம். 

இங்கு அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் வழங்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தண்ணீர்

தண்ணீர்

தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், குடல்புண் என்று சொல்லப்படும் இந்த அல்சரை வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது.

காலையில் உணவு அருந்தாமல்  இருப்பவர்களுக்கு கூட, வெறும் தண்ணீர் மட்டுமாவது குடித்துக் கொள்ளுங்கள். அல்சர் வராமல் தடுக்க முடியும்.

குளிர்ந்த பால்

குளிர்ந்த பால்

அசிடிட்டி இருக்கும் போது குளிர்ச்சியான பாலை குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் பாலில் உள்ள கால்சியம், அமிலத்தின் உற்பத்தியைக் குறைக்கும். 

பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும். சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.

முட்டைகோஸ் சாறு 

முட்டைகோஸ் சாறு

முட்டைகோஸ் என்பது எளிதில் கிடைக்கக் கூடிய இலையுடைய காய்கறி வகையாகும். முட்டைகோஸ் சாறு பருகுவதற்கு ஏற்ற ஒரு பானமாகும். 

அல்சர் பாதிப்பு கொண்ட நோயாளிகள் தினமும் முட்டைகோஸை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால், 

சாதாரணமாக அவர்கள் குணமாக  எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட மூன்றில் ஒரு பங்கு நேரம் குறைகிறது. அசிடிட்டியில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.

புதினா இலைகள்

புதினா இலைகள்

புதினா இலைகள் அசிடிட்டியால் ஏற்படும் வலி மற்றும் நெஞ்செரிச்சலைக் குறைக்கும். 

இதற்கு புதினாவில் உள்ள குளிர்ச்சித் தன்மை, அமிலத்தின் உற்பத்தியைக் குறைத்து வயிற்றை குளுமையாக்கும். 

புதினா ஜூஸை குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகளைத் தருகிறது என பார்க்கலாம். புதினாவில் ஃபைடோ சத்துக்கள், மென்தால், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. 

இவை வலியை குறைக்கும் ஆற்றல் தருபவை. புதினா ஜூஸ் குடித்தால், அஜீரணம், வயிற்றில் ஏற்படும் தொற்று ஆகியவை குணமாகி விடும்.

மோர் குடிப்பதால்

மோர் குடிப்பதால்

மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. 

நம் உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் தராமல், தாகத்தை தனித்து உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும். 

நம் உண்ணும் உணவு பொருட்களில் சில சமயங்களில் காரம் அதிகமாக சேர்ந்து விடும். அப்படிப்பட்ட உணவினை நாம் உண்ணும் போது, வயிறு எரிச்சலில் அவதிப்பட்டு வருவோம். 

இதனை சரி செய்ய ஒரு டம்ளர் மோர் குடித்தால் போதும். வயிற்றில் அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் உற்பத்தியை சாதாரண நிலைக்கு கொண்டு வரும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

சில நேரங்களில் சிலருக்கு நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண் தொல்லை கொடுக்கும். அவர்கள் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தீர்வு உண்டாகும். 

சிலர் இரவில் நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுவார்கள், அவர்கள் இரவு உணவிற்கு முன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். 

உணவு குழாயில் தேவையற்று இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கி நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது 

இது வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான அமிலத்தின் அளவைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் தான் காரணம்.

துளசி இலைகள்

துளசி இலைகள்

துளசி இலைகளைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலை மூலம் பெறலாம். 

வாய் துர்நாற்றத்தைப் போக்கும். துளசி இலையில் வயிற்றில் இருக்கும் புண்ணை குணப்படுத்தும் தன்மைகள் உள்ளது. 

மேலும் இது வயிற்றில் அமில உற்பத்தியைக் குறைத்து, பாதுகாப்பு படலத்தை உருவாக்கும்.

ஓமம்

ஓமம்

ஓமத்தை கையால் நசுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வர, அஜீரணம் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகள் உடனே விலகும். 

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்தி வருவது நல்லது. 

ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ

கெமோமைல்' எனப்படும் சீமைச்சாமந்திக்கு கிருமிகளை எதிர்க்கும் பண்பு உண்டு.. அசிடிட்டி பிரச்சனை இருந்தால், சீமைச்சாமந்தி டீயை ஒரு டம்ளர் பருகினால், வயிற்றில் சுரக்கப்படும் அமில உற்பத்தி குறையும்.  

நல்ல ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு ஆற்றல் இவற்றிற்கு சீமைச்சாமந்தி டீ ஏற்றது. .எகிப்தியர் பழங்காலத்தில் இந்த பானத்தை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)