இந்த உருளைக்கிழங்கு சாறு குடித்தால் எந்த நோயும் வராது... குடிச்சி தான் பாருங்களேன் !





இந்த உருளைக்கிழங்கு சாறு குடித்தால் எந்த நோயும் வராது... குடிச்சி தான் பாருங்களேன் !

0

உருளைக் கிழங்கை வைத்து பல வகையான உணவுகளை சமைக்கலாம். ஆனால் அது கார்போஹைட்ரேட் அதிகம் கொண்டதால் உடல் எடையை அதிகரிக்கும் என்பதே பெரும்பாலும் பேசப்படுகிறது.  

இந்த உருளைக்கிழங்கு சாறு குடித்தால் எந்த நோயும் வராது... குடிச்சி தான் பாருங்களேன் !
ஆனால் அது உண்மையில் ஆரோக்கியம் நிறைந்தது தான்.  உருளைக்கிழங்கு சாறு கண்ணாடி டம்ளரில் நிரப்பி சுவையை ரசித்து குடித்திருப்பவர்கள் வெகு குறைவு என்று தான் சொல்ல வேண்டும். 

அசாதாரணமான காய்கறி சாறு என்று நினைப்பவர்கள் இந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். ஏனெனில் இதன் நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

எந்த இயற்கை உணவும் உடலுக்குக் கெடுதல் அல்ல. அவரவர் வாழ்க்கை முறையை வைத்தே அதன் ஆரோக்கியம் அடங்கும்.

உருளைக்கிழங்கு சுவையானதா, மாவுச்சத்து கொண்டிருக்காதா என்றெல்லாம் கேட்கலாம். ஆனாலும் ஊட்டச்சத்து நிறைந்தவை. 

இதில் அடர்த்தியான பானத்துக்கு மற்ற காய்கறி சாறுகளுடன் கலப்பது சிறந்த சாறாக இருக்கும்.

​உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்

​உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்

உருளைக்கிழங்கு சாறு சிறந்த ஆற்றல் தரும் பானம் என்று சொல்லலாம். இந்த சாற்றில் இயற்கை சர்க்கரைகள் எளிதான ஆற்றல் வடிவங்களில் உண்டு.

இது அதிக அளவு தயாமினை கொண்டுள்ளது. இது கார்போ ஹைட்ரேட்டுகளை உடனடியாக பயன்படுத்தக்கூடிய ஆற்றலை உடைக்கும் திறனை மேம்படுத்த செய்யும்.

​செரிமானத்தை தூண்டும்

​செரிமானத்தை தூண்டும்

உருளைக்கிழங்கு ஸ்டார்ச்சின் உள்ளடக்கம் பல செரிமான பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. இது குடலில் உள்ள அழற்சியைத் தணிக்கவும், 

செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல், வீக்கம், தசைப்பிடிப்பு மற்றும் அஜீரணம் போன்ற அறிகுறிகளை போக்க செய்யும். செரிமானத்தை தூண்டக்கூடியது.

வயிற்றுக் கோளாறு  

வயிற்றுக் கோளாறு

உருளைக்கிழங்கு சாறு ஆண்டாக்சிட் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் இது சற்று கார பி.ஹெச் அளவை கொண்டுள்ளது. 

இது குடலில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தவும். இரைப்பை புண்களை தடுக்கவும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.

வாயுப்பிரச்னை, வயிற்றில் அதிக ஆசிட் உருவாக்கத்தால் நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு கிளாஸ் உருளைக்கிழங்கு சாறு குடித்தால் எல்லாம் பறந்து போகும். 

இதை ஆய்வுகள் கூட உருளைக் கிழங்கு சாறு அல்சருக்கு நல்லது என பரிந்துரைக்கிறது. 

​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ஒரு டம்ளர் உருளைக்கிழங்கு சாறில் குறிப்பிடத்தக்க பொட்டாசியம் அளவு உள்ளது. இது தினசரி தேவைக்கு 50% அதிகமாகவே உள்ளது. 

இந்த சாறுடன் நாளை தொடங்குவது இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் மீதான பதற்றத்தை தணிக்கும்.

இது இதய அமைப்பில் உள்ள அழுத்தத்தை குறைக்கும். உங்கள் இரத்த அழுத்தம் குறையும் இது மாரடைப்பு, பெருந்தமனி, தடிப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தையும் குறைக்கும்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம்

உருளைக்கிழங்கு சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நீண்ட நாட்பட்ட மலச்சிக்கல் குடலில் நச்சுக்கள் பெருகும்.

அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம் டினல் டோக்ஸிமியா தவிர்க்கப்படுகிறது. பொதுவாக கருவுற்ற தாய்மார்களுக்கு இது போன்ற ரத்த அழுத்தம் ஏற்படுவது இயற்கையாகும். 

மேலும் மூட்டுக்களில் வாத நீர் தேங்கி வீக்கமும், வலியும் உண்டாக்குகின்ற “கவுட்” என்னும் நோய், சிறுநீரகக்கற்கள், மற்றும் நீரேற்றம் ஆகியனவும் 

பல மாதங்கள் தொடர்ந்து உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் குணமாகிறது என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

​நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது

​நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது

வைட்டமின் சி நிறைந்த உருளைக்கிழங்கு சாறு வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

பிற ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நோய் எதிர்ப்பு தாதுக்கள் நாள்பட்ட நோய் மற்றும் குறைந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன. காயங்கள் குணமடைவதை வேகப்படுத்துகிறது. 

உருளைக்கிழங்கு சாற்றில் வைட்டமின் சி இருப்பதால் இது கொலாஜன் உற்பத்தியை தூண்ட உதவுகிறது. மேலும் காயங்கள், புண் தசைகள் குணமடைய செய்கிறது.

​உடல் உறுப்புகளை சீராக்குகிறது

​உடல் உறுப்புகளை சீராக்குகிறது

உருளைக்கிழங்கு சாற்றில் அதிக அளவு வைட்டமின் பி குடும்பத்தின் நியாசின் உள்ளது. இந்த வைட்டமின் உடல் உறுப்புகளின் பணியை மேம்படுத்தும். 

உடலின் பல்வேறு ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்துவதோடு உறுப்புகள் உடலில் உண்டாகும் சிறிய சேதத்தை சரி செய்து கொள்ளவும், 

சாதாரண செயல்பாட்டுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது. இது ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்துகிறது.

உருளைக்கிழங்கு சாறை தவறாமல் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களின் அளவை மேம்படுத்த உதவும். பாலினம் சீராக இருக்க செய்யும்.

​கல்லீரல் மற்றும் பித்தப்பை நச்சை நீக்குகிறது

​கல்லீரல் மற்றும் பித்தப்பை நச்சை நீக்குகிறது

உருளைக்கிழங்கு சாறு கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்க செய்கிறது. உருளைகிழங்கில் உள்ள பொருள்கள் 

உடலில் இரண்டு முக்கிய உறுப்புகளான கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற செய்கிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

​சருமத்துக்கு நன்மை செய்யும்

​சருமத்துக்கு நன்மை செய்யும்

உருளைக்கிழங்கு சாறு சரும ஆரோக்கியத்திற்கானது. இது வறண்ட சருமம், சுருக்கங்கள், வயதான தோற்ற கரும்புள்ளிகள், வீக்கம், காயங்கள் உள்ளிட்ட சரும நிலைகளை அழிக்க செய்கிறது. 

இதன் சாறு சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள செய்கிறது.

நுரையீரல் , சிறுநீரம் பாதிக்கப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தும் விதமாக கண்களுக்குக் கீழ் கருவளையம் வரும் என்பார்கள். 

அந்த வகையில் அதை சரி செய்ய உருளைக்கிழங்கு சாறு நல்ல மருந்து. சருமத்தடிப்பு, தோல் அழற்சி, முகப்பரு போன்ற நிலைகளை சரிசெய்யும். 

சருமத்தை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க செய்யும். உருளைக்கிழங்கு சாறு சருமத்தின் நிறத்தை பாதுகாக்க செய்யும்.

​கூந்தலுக்கு நன்மை செய்யும்

​கூந்தலுக்கு நன்மை செய்யும்

உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்துவதன் மூலம் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தலை பொடுகு, வீக்கம், உச்சந்தலை வறட்சியை தடுக்க செய்கிறது.

இந்த சாற்றை மயிர்க் கால்களின் வேர் முதல் நுனி வரை தலைமுடியில் மசாஜ் செய்வதன் மூலம் ஒவ்வொரு இழைகளையும் வலிமையாக வைத்திருக்க செய்கிறது. 

இது கூந்தலுக்கு பிரகாசத்தை அளிக்கும். உருளைகிழங்கு சாறை கூந்தலில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுத்தால் கூந்தல் பளபளவென்று இருக்கும்.

வைட்டமின் பி 

வைட்டமின் பி

உருளைக்கிழங்கு வைட்டமின் B1, B2, B3 நிறைவாகக் கொண்டது. ஆரோக்கியமான இரத்த அணுக்கள் மற்றும் நரம்புகளை பராமரிப்பதற்கு பி 12 முக்கியமானது.

உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். மூளைக்கு சுறுசுறுப்பு அளித்து சோர்வை தளர்த்தும்.

ஸ்கர்வி என்னும் ரத்தப் போக்கு

ஸ்கர்வி என்னும் ரத்தப் போக்கு

உருளைக்கிழங்கு “ஸ்கர்வி” என்னும் ரத்தப் போக்கை உண்டாக்கும் நோய்க்கு மிகச்சிறந்த தீர்வு ஆகும். “ஸ்கர்வி” என்னும் நோய் விட்டமின் சி சத்து குறைபாட்டால் ஏற்படும் ஓர் நோய் ஆகும். 

இதனால் ஈறுகளினின்று எளிதில் ரத்தம் வெளியேறுதல் அல்லது எங்கேனும் அடிபட்ட போது அதிக ரத்தப்போக்கு ஆகியன உண்டாகும். 

குழந்தைகளுக்கு ஏற்படும் “ஸ்கர்வி” நோய்க்கு உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு அரைத்து பசையாக உள்ளுக்குப் கொடுப்பது ஓர் நல்ல தீர்வாகும். 

பக்கவிளைவுகள் யாருக்கு

உருளைக்கிழங்கு சாறு குடித்தால் பக்கவிளைவுகள் யாருக்கு?

உருளைக்கிழங்கு ஜூஸ் உடலுக்கு செய்யும் நன்மைகள் குறித்து தெரிந்து கொண்டோம். 

எனினும் இது இரப்பை, குடல் பிரச்சனை, உயர் சர்க்கரை அளவு உள்ளிட்ட எதிர்மறையான பக்கவிளைவுகளை உண்டாக்கும். 

எனினும் உருளைக்கிழங்கு ஜூஸை தவறாக தயாரிக்கும் போது அல்லது அதிக அளவில் குடிக்கும் போது பக்கவிளைவுகள் பொதுவாக காணப்படும். 

இந்த உருளைக்கிழங்கு ஜூஸ் பெரும்பாலும் எதிர்மறையான பக்கவிளைவுகளை உண்டாக்குவதில்லை.

இதில் அதிக அளவு இயற்கை சர்க்கரைகள் உள்ளன. இது நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். 

இந்த உருளைக்கிழங்கு சாறு குடித்தால் எந்த நோயும் வராது

எனினும் மிதமாக உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் குளுக்கோஸ் அளவு குறித்து கவனம் கொள்ளலாம். உருளைக்கிழங்கில் முளை விட்டது. பச்சை நிறத்தில் கொண்டது, 

குழியாக இருப்பதை ஜூஸாக்கி குடித்தால் இதில் இருக்கும் நச்சுக்கள் வயிற்று வலி, குமட்டலை உண்டாக்கும். 

வயிற்று பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இனு இன்னும் கூடுதல் பாதிப்பை உண்டாக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)