மஞ்சள் தூளில் செய்யப்படும் கலப்படம் அறிந்து கொள்ள?





மஞ்சள் தூளில் செய்யப்படும் கலப்படம் அறிந்து கொள்ள?

0

தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் மஞ்சள் (Turmeric) நீங்கா இடம் பெற்றுள்ளது. 

மஞ்சள் தூளில் செய்யப்படும் கலப்படம் அறிந்து கொள்ள?
அன்றாட உணவு தயாரிப்பில் தவறாமல் இடம் பெறும் ஒரு மசாலா என்றால் மஞ்சள் தூள். கிருமி நாசினியாகவும், உணவுக்கு சுவை யூட்டியாகவும், 

உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப் படுத்தப்படுகிறது 

பாதம் மற்றும் உள்ளங்கையில் கூச்ச உணர்வை தடுக்கும் சில வழிகள் !

மஞ்சள்தூள், நம் நாட்டின் பாரம்பரிய உணவுப் பொருளாகவும் உள்ளது. குறிப்பாக பெண்களின் வாழ்வில் பெரும் முக்கியத்துவத்தை வகிக்கிறது. 

இதனாலேயே தான் சொல்வார்கள் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்தால் முகம் அத்துணை பளபளப்பாக இருக்கும் என்று. 

ஆனால் இந்த மஞ்சள் பெண்களின் அழகை மெருகேற்றுவதற்கு மட்டுமல்ல, இதில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ நன்மைகள் ஆண்களுக்கு சமமாகும்.

குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

மஞ்சள் (Turmeric) மிகச்சிறந்த கிருமி நாசினியாகும் (Antiseptic). உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப் படுத்தப்படுகிறது.

மஞ்சளில் உள்ள சத்துக்கள்

மஞ்சளில் உள்ள சத்துக்கள்

மஞ்சளில் புரதம் (Proteins), நார்ச்சத்து (Fiber), வைட்டமின் E (Vitamin E), நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), 

இரும்பு (Iron), கால்சியம் (Calcium), மக்னீசியம், துத்தநாகம் (Zinc) போன்ற ஊட்டச் சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. 

கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

அது மட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், பல்வேறு வகைகளில் உடலுக்கு நன்மை அளிக்கிறது.

கடுகு, கொத்தமல்லி, சாம்பார்தூள், மஞ்சள்தூள் என அனைத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது. 

அதிகப்படியான லாபத்துக்கு ஆசைப்பட்டு சிலர் செய்யும் இந்த மோசமான செயல் பலரின் உடல் நலத்தை பாதிக்கிறது. 

நம் உடல் இம்யூனிட்டிக்கு இதை சாப்பிடுவதே நல்லது !

அந்த வகையில், நாள்தோறும் பயன்படுத்தும் மஞ்சள் தூள் தரமானதா? அல்லது கலப்படமானதா? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள?

மஞ்சள் தூள் கலப்படம் : 

மஞ்சள் தூள் கலப்படம்

சமையலறையில் தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் மஞ்சள் தூளில், இரண்டு விதமான கலப்படங்கள் செய்யப்படுகின்றன. 

சுண்ணாம்பு, அரிசி மாவு, ஸ்டார்ச் பவுடர் ஆகியவற்றை கலந்து மஞ்சள் தூளில் கலப்படம் செய்கின்றன. இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்றாலும் ஊட்டசத்து இருக்காது. 

மற்றொரு முறையில், பளீச்சென்ற கலர் மற்றும் மினுமினுப்பை கொடுப்பதற்காக 'லெட் குரோமேட்' மஞ்சள் நிற மெட்டானில் (metanil yellow) என்ற ரசாயனங்கள் கலக்கப்படுகிறது.

இந்த ரசாயனம் சேர்க்கப்பட்ட மஞ்சள் கிழங்கு, தண்ணீரில் உடனடியாக நிற மாற்றத்தை ஏற்படுத்தி விடும். கிழங்கும் பளீர் மஞ்சள் நிறமாக இருக்கும். 

விஷத்தன்மை வாய்ந்த இந்த ரசாயனங்களை சாப்பிடும் போது ரத்தச்சோகை, குறைப்பிரசவம், மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 

கலப்பட மஞ்சள் தூள் மற்றும் நல்ல மஞ்சள் தூளை பார்த்தவுடன் கண்டுபிடிப்பது கடினம். 

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் உணவு !

ஒரு சில எளிமையான சோதனைகள் மூலம் கலப்பட மஞ்சள் தூளை கண்டுபிடித்து விடலாம். எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

1. மஞ்சள் மெட்டானில் ரசாயனம் (metanil yellow)

மஞ்சள் மெட்டானில் ரசாயனம் - metanil yellow

சோதனைக் குழாய் ஒன்றை எடுத்து சிறிதளவு மஞ்சளை அதில் போட்டுக் கொள்ளுங்கள். 

அதனுடன் சிறிதளவு செறிவூட்டப்பட்ட ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் சிறிது தண்ணீரையும் சேர்க்கவும். பின்னர், சோதனைக் குழாயை வேகமாக அசைத்து பாருங்கள். 

சோதனைக் குழாயில் இருக்கும் மஞ்சள் தூள் இளம் சிவப்பாக மாறினால் நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் மெட்டானில் ரசாயனம் கலந்துள்ளது என்பது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

லட்டு, பிரியாணிகளில் கலர் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. 

மெட்டானில் கலந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் போது குமட்டல், வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும்.

2. சுண்ணாம்பு கலப்படம் : 

சுண்ணாம்பு கலப்படம்

சோதனைக் குழாய் அல்லது கண்ணாடிக் குடுவை ஒன்றை எடுத்து அதில் சிறிதளவு மஞ்சளை போட்டு, அதனுடன் சிறிதளவு ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டை சேர்த்து கலக்குங்கள். 

உடனடியாக திரவ குமிழ்கள் உண்டானால், அதில் சுண்ணாம்பு கலந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். 

3. தண்ணீர் சோதனை : 

தண்ணீர் சோதனை

மஞ்சளில் கலப்படம் இருப்பதை தண்ணீரைக் கொண்டு எளிமையாக கண்டுபிடித்து விடலாம். கண்ணாடி டம்ளர் ஒன்றில் வெது வெதுப்பான நீரை எடுத்து, அதனுடன் மஞ்சளை சேர்க்க வேண்டும். 

கலக்க வேண்டாம். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் அதனை மீண்டும் பார்க்கும் போது மஞ்சள் டம்ளரின் அடிப்பகுதியில் சேர்ந்திருந்து தண்ணீர் தெளிவாக இருந்தால், 

உங்கள் மஞ்சள் சுத்தமானது. கலங்களாகவோ அல்லது மஞ்சள் தண்ணீரின் மேல் மிதந்து கொண்டிருந்தாலோ அதில் கலப்படம் உள்ளது.

மஞ்சள் வேர் கலப்படம் : 

மஞ்சள் வேர் கலப்படம்

மஞ்சள் தூள் மட்டுமல்லாது வேரிலும் கலப்படம் செய்யப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க வேண்டு மென்றால், மஞ்சள் வேரை எடுத்து தண்ணீரை ஊற்றி கழுவுங்கள். 

வேரின் நிறம் மாறினால், அந்த மஞ்சள் வேர் ரசாயனத்தால் மெருகூட்டப் பட்டிருக்கலாம், 

கலப்பட மஞ்சள் வேர் என்பதை உறுதி செய்யுங்கள். விருப்பப்பட்டால் நீங்கள் வாங்கிய கடைக்காரரிடமும் தெரியப் படுத்தலாம்.

புகார் செய்யலாம்!

கலப்படம் பற்றிய புகார் செய்யலாம்!

உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பது பற்றி தெரிய வந்தால், பொதுமக்கள், உடனடியாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ்ஆப் புகார் எண்ணுக்கு, 9444042322 தகவல் தெரிவிக்கலாம். 

உணவுப் பொருட்கள், பாக்கெட், லேபிளில் இருக்கும் விவரங்களுக்கு மாறாக இருந்தாலும், காலாவதி ஆகி இருந்தாலும் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)