சர்க்கரை நோயாளிகள் உடலில் நோன்பு என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும்?





சர்க்கரை நோயாளிகள் உடலில் நோன்பு என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும்?

0

ரமலான் நோன்பு காலம் தொடங்கி உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு கொண்டு வருகிறது. 

சர்க்கரை நோயாளிகள் உடலில் நோன்பு என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும்?

இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைப்படி குறிப்பட்ட வயதிற்கு மேல் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் நோன்பை கடைபிடிக்க வேண்டும்.

புனித ரமலான் மாதத்தில் விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாகவே காலை 5 மணிக்கு நோன்பு தொடங்கிவிடும். 

ஜாக்கிரதையாக போ தாயி... அன்பா பாசமா இருந்துட்டு போவோம்... ஞானகுருக்கள் !

சூரியன் அஸ்தமனமான பிறகு மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். இந்த காலக்கட்டம் சுய சுத்திகரிப்பு, அன்பு மற்றும் இரக்கத்தை வளர்த்துக் கொள்ளும் காலமாக கருதப்படுகிறது. 

வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள், பயணத்தில் இருப்போர் நோன்பு இருக்க வேண்டியதில்லை என இஸ்லாம் மதம் விலக்கு அளித்துள்ளது. 

வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் நோன்புக்கு பதிலாக, 30 நாள் உணவுக்கு செலவாகும் தொகையை தர்மமாக தரலாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். 

சுவையான ரமலான் மட்டன் ஹலீம் செய்வது எப்படி? 

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ரமலான் மாதத்தில் எப்படி நோன்பு இருக்க வேண்டும் என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை சகஜமான வாழ்க்கை வாழ விடாமல் செய்து கொண்டிருக்கும் ஒரு மோசமான நோய் என்றால் அது சர்க்கரை நோய் தான். 

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருக்கலாமா, கூடாதா என்பது இன்றும் விடை தெரியாத ஒரு கேள்வியாகும். 

ஆரோக்கியத்திற்கும், நம்பிக்கைக்கும் இடையில் மிகப்பெரிய குழப்பம் நிலவிக் கொண்டிருக்கிறது. குறைவான அளவில் சர்க்கரை பாதிப்பு இருப்பவர்கள் விரதம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

நோன்பு இருக்க தொடங்கும் முன் சர்க்கரை நோய் இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகுவது நல்லது. 

உங்களால் நோன்பு இருக்க முடியுமா, உங்கள் உடல்நிலை அதைப்பற்றி என்ன சொல்கிறது என்பதை மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளளவும். 

ஏனெனில் புனித குரானின் படி கடுமையான ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்களுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விரதம் எப்படி சர்க்கரை நோயை பாதிக்கிறது?

விரதம் எப்படி சர்க்கரை நோயை பாதிக்கிறது?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கும் ஏதாவது சாப்பிட வேண்டும். 

அதற்கேற்றவாறு அவர்களின் உணவு முறையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். ஆனால் ரமலான் நோன்பிறகு 11 முதல் 16 மணி நேரம் வரை விரதம் இருப்பது தேவைப்படுகிறது, 

ரமலான் கேரளா மட்டன் மசாலா செய்வது எப்படி?

குறிப்பாக கோடை காலத்தில் சூரியன் தாமதமாகத்தான் மறையும். இது உங்கள் ஆரோக்கியத்தில் பல பாதிப்புகளை உண்டாக்கும். 

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தும் நோன்பிருக்க விரும்பினால் இந்த பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஹைப்போக்ளைசீமியா

ஹைப்போக்ளைசீமியா என்பது

ஹைப்போக்ளைசீமியா என்பது சர்க்கரை அளவு சாதாரண அளவை விட உங்கள் உடலில் சர்க்கரை அளவு அடிமட்ட நிலைக்கு போவதாகும். 

அபாய அளவுகளில் ரத்த குளுக்கோஸ் அளவு குறைவதை 'ஹைப்போக்ளைசீமியா (Hypoglycaemia)' என்று சொல்வோம். 'ஹைப்போ' என்றால் குறைவு, 'க்ளைசீமியா' என்றால் ரத்த குளுக்கோஸ் அளவு என்று பொருள். 

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் உணவு !

நீண்ட நேர விரதம் உங்கள் இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஹைப்போக்ளைசிமீயா ஏற்பட மிக அதிக வாய்ப்புள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள். 

சரியான கால இடைவெளியில், சரியான அளவுகளில் உணவு உண்ணாமல் இருந்தால் அவர்களுக்கு ரத்த குளுக்கோஸ் அளவு குறையும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கீட்டோ ஆசிடியோடிஸ்

கீட்டோ ஆசிடியோடிஸ்

உங்கள் உடலில் போதுமான குளுக்கோஸ் இல்லாத போது உங்கள் உடல் ஆற்றலுக்காக கொழுப்பை எரிக்க தொடங்கினால் உங்களுக்கு நீரிழிவு கீட்டோ ஆசிடியோடிஸ் பிரச்சினை ஏற்படலாம். 

இது நச்சு பொருளான கீட்டோன்களை உருவாக்கும், இது இரத்தத்தில் அமிலத் தன்மையை அதிகரிக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாகும்.

நீர்சத்து குறைவு

நீர்சத்து குறைவு

உடலில் நீர் தன்மை குறைந்து விட்டால் அதை நாம் டீஹைடிரேஷன் (dehydration) என்கிறோம்.  உடலுக்கு தேவையான தண்ணீர் குறைந்து விட்டால் நம்மால் சாதாரணமாக செயல்பட முடியாது. 

உடலில் நீர் சத்து / அளவு குறைந்தால் இரத்தத்தின் அடர்த்தி குறையும். இதனால், இரத்த ஓட்டம் தடைப்படும், உடல் உறுப்புகளின் செயல்பாடு குறையும், செரிமான சிக்கல்கள் ஏற்படும்.

காக்கிக்கு இன்னொரு பெருமை இருக்குடா... அதில் தியாகத்தின் ஈரம் அதிகம் !

நோன்பு முடிந்த பிறகு அதிகமாக சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை உடனடியாக அதிகரிக்கும்.  மேலும் நோன்பு இருக்கும் போது தண்ணீர் குடிக்க அனுமதியில்லை, 

இதனால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.நீர் சத்து குறைவு மிக ஆபத்தான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை

ரமலான் நோன்பு இருக்க முடிவெடுத்து விட்டால் அதற்கு ஏற்றார் போல உங்களுடைய உணவு முறையை திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

இப்தார் விருந்தின் போது இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் குளுகோஸின் அளவை சீராக வைக்க உதவும். 

ரம்ஜானுக்கு ஸ்பெஷலான மட்டன் வெள்ளை குருமா செய்வது எப்படி?

இப்தார் விருந்தை எளிய கார்போ ஹைட்ரேட்டுகள் இருக்கும் உணவாக எளிதில் உறிஞ்சப்படக்கூடிய உணவுடன் தொடங்குங்கள் 

உதாரணத்திற்க்கு இரண்டு பேரிச்சை பழங்கள் அல்லது பாலுடன் தொடங்குங்கள். மருத்துவர் பரிந்துரைப்படி பாதாம் முதலான நட்ஸ் சாப்பிடலாம். 

ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு, பப்பாளி ஆகியவற்றைச் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். புரதச்சத்து நிறைந்த பயறு வகைகள், கடலை வகைகள், முட்டையின் வெள்ளைப் பகுதியைச் சாப்பிடலாம். 

அதன் பிறகு பழுப்பு அரிசி உணவு அல்லது சப்பாத்தி போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

சுஹுர் உணவு

சுஹுர் உணவு

கார்போஹைட்ரேட் பிரபலமான ஊட்டச்சத்து ஆகும். இது சர்க்கரை அல்லது ஸ்டார்ச் வடிவத்தில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் போன்ற பல உணவு பொருட்களில் காணப்படுகிறது.

சுஹுர் உணவிற்கு சிக்கலான கார்போ ஹைட்ரேட்டுகள் இருக்கும். முழுதானிய உணவு, முழுத்தனைய பிரெட், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள், 

மகாராஷ்டிராவில் விநோதம்... மணமகனுக்கு தாலிக் கட்டிய மணமகள் !

இது நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். இந்த வகை கார்போ ஹைட்ரேட்டுகள் குறைந்த க்ளைசமிக் குறியீட்டை கொண்டுள்ளது, 

நம் சமையலறையில் இருக்கக்கூடிய வெங்காயத்தை கொண்டு நீரிழிவு நோயை மிக எளிதில் கட்டுப்படுத்தலாம். 

தினமும் உணவில்  வெங்காயத்தை சேர்த்து கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். வெங்காயத்தில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும்  குறைவாக இருக்கிறது.

55-க்கும் குறைவான க்ளைசமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகள் நீரிழிவு நோய்களுக்கு சிறந்தது.

இதனால் அவை செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் நாள் முழுவதும் உங்களுக்கு பசி ஏற்படாத உணர்வு இருக்கும்.

மற்ற உணவுகள்

புரோட்டின் இருக்கும் மீன்

நமது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கிய தேவையாக அமைவது புரதசத்து (Protein) ஆகும். புரதமானது தசைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளிக்கிறது. 

உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், சீரான இயக்கத்திற்கும் புரோட்டின் சத்து மிகவும் அவசியமானது. 

புரோட்டின் இருக்கும் மீன், கொழுப்பு குறைவான பால், சீஸ், தூங்குவதற்கு முன் பால் அல்லது பழங்கள் சாப்பிடுவது உங்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். 

முதியவரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொலை செய்த வேலையாள் !

மாலை நேரத்தில் அதிகளவு தண்ணீர், இயற்கை பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

செயற்கை குளிர் பானங்களை தவிர்க்கவும். நார்ச்சத்துக்களை எடுத்துக் கொள்ள சாலட்களை சேர்த்து கொள்ளவும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்து கொள்ளவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)