பூப்படைந்த பெண்களுக்கு சிவப்பு அரிசி புட்டு தரும் நன்மைகள் !





பூப்படைந்த பெண்களுக்கு சிவப்பு அரிசி புட்டு தரும் நன்மைகள் !

0

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். 

பூப்படைந்த பெண்களுக்கு சிவப்பு அரிசி புட்டு தரும் நன்மைகள்
இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல் சிவப்பு அரிசிக்கு உண்டு.  சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. 

ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி' என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. 

அதனால் தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். சரி விசயத்திற்கு வருவோம்... 

பெண்களுக்கு சிவப்பு அரிசி புட்டு தரும் நன்மைகள்

பூப்படைந்த பெண்களுக்கு, கருப்பை ஆரோக்கியமாக இருக்க நாம் சில உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். 

பெண்கள் பூப்படையும் போது அவர்கள் உடலில் ஹார்மோன்கள் மாற்றமடையும். அது சிறப்பானதாகவும், கருப்பை வலுப்பெறவும் சில உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

வீடு விலை மலிவு என்று சொன்னால் வாங்க போறீங்களா உஷாரா இருங்க ! 

பூப்படைந்து முதல் மூன்று மாதங்களுக்கு நாம் சில உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதில் சிறந்த உணவு சிவப்பரிசியில் செய்யப்பட்ட புட்டு.  

சிவப்பு அரிசி புட்டு எப்படி செய்வது ?

தேவையானவை :

ஒரு சிவப்பு அரிசி 1 கிலோ, 

இட்லி அரிசி அரை கிலோ 

நாட்டுச் சர்க்கரை, 

ஏலக்காய், 

முந்திரி திராட்சை, 

பாதாம், 

பிஸ்தா, 

கொப்பரை தேங்காய்,

உப்பு

செய்முறை :

சிவப்பு அரிசி புட்டு எப்படி செய்வது

இட்லி அரிசியை கழுவி பொட்டு போன்று அரைத்துக் கொண்டு அதனை இட்லி பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, 

பின்னர் நெய், கொப்பரை தேங்காய், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய், முந்திரி திராட்சை, பாதாம், பிஸ்தா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பெண்களுக்கு கொடுத்து வந்தால் மிகவும் நல்லது.

நன்மைகள்:

ஏனெனில் சிவப்பு அரிசியில் வைட்டமின் பி1 பி3 பி6 போன்ற சத்துக்கள் உள்ளது. இதில் இரும்புச்சத்து, மக்னீசியம் , மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்களும் உள்ளது. 

இது பெண்கள் பருவமடையும் போது கொடுத்தால் மிகவும் நல்லது. கொப்பரை தேங்காய் துருவல் வயிற்றில் இருக்கும் புண்ணை ஆற்ற வல்லது. மாதவிடாய் சுழற்சி சீராக இருக்க இது மிகவும் உதவும்.

பூப்படைந்த காலத்தில் பெண்களுக்கு நல்லெண்ணெய் அதிக அளவில் கொடுப்பார்கள். அதே போன்று நெய்யையும் நாம் கொடுக்கலாம். 

சிவப்பு அரிசி புட்டு தரும் நன்மைகள்
அவ்வாறு கொடுக்கும் போது தசைப்பிடிப்புகள் வலுவிழக்கும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலும் இது ரத்தத்தை சுத்தம் செய்ய மிகவும் உகந்தது.

வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவை கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இதில் இரும்புச் சத்துக்கள் உள்ளதால் பெண்களுக்கு இடுப்புக்கு வலிக்கு மிகவும் நல்லது.

முதுகில் பருக்கள் வருவது எதனால்? அகற்றுவது எப்படி? 

இவற்றை எல்லாம் நாம் கலந்து பூப்படைந்த பெண்களுக்கு நாம் கொடுக்கும் பொழுது அவை அனைத்தும் பெண் பிள்ளைகளை நலமாக வைக்க உதவும். 

மேலும் அவர்கள் பெரியவர்களாகித் திருமணம் ஆன பிறகு பிள்ளைப்பேறு பெறுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)