பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?





பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?

உங்கள் குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அப்படியெனில் அவர்களுக்கு கீரையை வித்தியாசமான முறையில் சமைத்துக் கொடுங்கள். 

பாலக் பன்னீர் ரெசிபி
குறிப்பாக இரவில் சப்பாத்தி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பாலக் பன்னீர் செய்து கொடுங்கள்.

இது உங்கள் குழந்தை விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, அலுவலகம் முடிந்து களைப்புடன் வீட்டிற்கு வரும் உங்கள் துணைக்கும் நல்ல விருந்து கொடுத்தது போன்று இருக்கும். 

சரி, இப்போது அந்த பாலக் பன்னீரை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: 

பன்னீர் – 250 கிராம் எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன் 

வெங்காயம் – 2 (நறுக்கியது) 

வெந்தயக் கீரை – 1/2 கப் 

நறுக்கிய இஞ்சி, பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் 

பச்சை மிளகாய் – 4-5 

தக்காளி – 2 (நறுக்கியது) 

பசலைக் கீரை – 2 கட்டு 

கொத்தமல்லி – சிறிது 

சீரகம் – 1/2 டீஸ்பூன் 

மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் 

தயிர் – 3-4 டேபிள் ஸ்பூன் 

பிரஷ் க்ரீம் – 3-4 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். 

பின்னர் அதில் பசலைக்கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும். 

பின்பு அதில் தக்காளியை சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும். 

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், 

இஞ்சி, பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து, அத்துடன் உப்பு, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். 

அடுத்து அதில் தயிர், க்ரீம் சேர்த்து கிளறி, பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக பிரட்டி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பாலக் பன்னீர் ரெடி!

Tags: