தேவையான பொருள்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பட்டை -2கிராம்பு - 2
சீரகம் - 1 ஸ்பூன்
நெய் - 1 கப்முந்திரி - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
ஹைதராபாதி நிஜாமி பிரியாணி செய்முறை !
செய்முறை:
கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் 2 கப் அரிசி சேர்த்து சாதமாக வடித்து ஒரு பௌலில் சாதத்தை கொட்டி ஆற விட வேண்டும்.
அப்படி செய்தால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு கப் நெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
ஐடி பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
பிறகு அதில் வாசனைக்காக பட்டை, கிராம்பு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பொன்னிறமாக வறுத்த பிறகு வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து பத்து நிமிடம் கிளற வேண்டும்.
கடைசியில் கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான நெய் சோறு தயார்.