செரிமானத்தை தூண்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி?





செரிமானத்தை தூண்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி?

0

மழைக் காலத்தில் செரிமானம் மெதுவாக நடக்கும். இதனால் எந்த உணவையும் எளிதில் செரிக்காது. வயிறும் மந்தமாக இருக்கும். சிலர் அடிக்கடி வயிற்று வலியாலும் சிரமப்படுவார்கள். 

செரிமானத்தை தூண்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி?
இது போன்ற உபாதைகளை தடுக்க சிலபல வைத்தியங்களை செய்ய வேண்டும். பொதுவாகவே மழைக்காலத்தில் செரிமானம் மெதுவாக நடக்கும். 

இதனால் எந்த உணவையும் எளிதில் செரிக்காது. வயிறும் மந்தமாக இருக்கும். சிலர் அடிக்கடி வயிற்று வலியாலும் சிரமப்படுவார்கள். 

சர்க்கரைக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?

இது போன்ற உபாதைகளை தடுக்க சிலபல வைத்தியங்களை செய்ய வேண்டும். அந்த வகையில் செரிமானத்தை தூண்டி, வயிற்று பிரச்சனைகளை சரி செய்யும் இஞ்சியை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. 

இஞ்சியில் இயற்கையாகவே ஆரோக்கிய குணம் உள்ளதால் இந்த இஞ்சி சட்னியை வாரத்தில் 2 முறை சமைத்து சாப்பிடுங்கள். எப்படி இஞ்சி சட்னி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

இஞ்சி - 1/2 கப் 

கடலை பருப்பு - 2 ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 5 

வெல்லம் -1 ஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிதளவு 

புளி - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

கடுகு - சிறிது 

கேரளா ஸ்பெஷல் மக்ரோனி சர்க்கரை வரட்டி எப்படி செய்வது?

செய்முறை: 

செரிமானத்தை தூண்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி?

முதலில் இஞ்சியை தண்ணீரில் நன்கு அலசி சிறு சிறு தூண்டுக்ளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும். 

இஞ்சியை வதக்கிய பிறகு அதில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் வதக்கி அடுப்பை அணைத்து விட வேண்டும். 

பிறகு வதக்கிய பொருளுடன் சிறிதளவு புளி கரைசல், மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைக்க வேண்டும். 

கோடை காலத்துக்கு ஏற்ற மசாலா மோர் செய்வது எப்படி?

பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் ஊற்ற வேண்டும். பத்தே நிமிடத்தில் இஞ்சி சட்னி தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)