குடலில் புழுக்களை வெளியெற்றும் எருக்கம் பூ !





குடலில் புழுக்களை வெளியெற்றும் எருக்கம் பூ !

0

மூலிகை தாவரங்கள் உயிர்ப்போடு இருக்க கூடியவை. அதிலும் எருக்கன் பராமரிக்கப்படாத இடங்களிலும் தண்ணீரே இல்லா விட்டாலும் கூட 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 

புழுக்களை வெளியெற்றும் எருக்கம் பூ

எருக்கன் செடியில் பல வகை உண்டு, அதில் வெள்ளெருக்கு சிறப்பு வாய்ந்தது. எருக்கன் செடியின் பூ, பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. 

எருக்கன் பூவை கொண்டு செய்யும் வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

இரைப்பு பிரச்சனை

இரைப்பு பிரச்சனை

எருக்கன் பூவை எடுத்து நடுவில் இருக்கும் நரம்புகளை நீக்கி அதன் வெள்ளை இதழ்களை மட்டும் தனியாக எடுத்து சுத்தம் செய்து அதனுடன் மிளகும் கிராம்பும் சம அளவு சேர்த்து மைய அரைக்கவும். 

நீர் சேர்க்காமல் இயன்ற அளவு கட்டியாக அரைக்க வேண்டும். இந்த விழுதை சிறு உருண்டைகளாக உளுத்தம் பருப்பு அளவு உருட்டி தட்டில் பரப்பி அதன் மேல் மெல்லிய துணி போர்த்தி காய விடவும். 

உங்கள் குழந்தையை தவழ விடுங்கள் !

அல்லது நிழலில் உலர்த்தி காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் இதை எடுத்து கண்ணாடி பாட்டிலில் வைத்து பதப்படுத்தவும். 

ஆஸ்துமா நோயாளிகள் இரைப்பு பிரச்சனையை எதிர் கொள்ளும் போது ஒரு உருண்டையை போட்டு தண்ணீர் குடித்து விழுங்கவும். இரைப்பு  பிரச்சனையை உடனே சரி செய்யும்.

இரைப்பு பிரச்சனை விடாமல் இருக்கும் போது எருக்கன் பூ நீரை குடித்து வருவதன் மூலம் ஓரளவு அறிகுறி தணியும். 

5 எருக்கன் பூவை எடுத்து வெள்ளை இதழ்களை தனியாக எடுத்து நீரில் இட்டு அதனுடன் இஞ்சி சிறுதுண்டு, மிளகு சேர்த்து அரை பங்கு வரும் அளவு காய்ச்சி, குடித்து வந்தால் இரைப்பு கட்டுப்படும். ஆரம்ப கட்டமாக இருந்தால் குணமாகவும் கூடும்.

மார்பு சளி 

மார்பு சளி

மார்பு சளி கரைய எளிதான வைத்தியம் எருக்கன் இலை. எருக்கன் இலையை எரிய வைத்தால் வரும் புகையை வாய் வழியாக சுவாசித்தால் மார்பு சளி வெளியேறும். 
ஆண்கள், பெண்கள் அழகாகத் தெரியும் வயது எது?

நடுத்தர வயதினருக்கு இது சரி, ஆனால் குழந்தைகளுக்கு மார்பு சளி இருக்கும் போது மண் சட்டியில் எருக்கன் இலையை போட்டு எரிய விட்டு புகையை அறை முழுக்க பரவினால் போதும். 

அதிகமான புகை போட வேண்டாம். குழந்தைகள் சுவாசிக்கும் அளவு இருந்தால் போதுமானது. அதிகமான புகை மூச்சுத் திணறலை உண்டாக்கி விடும். இதே போன்று வயதானவர்களுக்கும் செய்யலாம்.

புண்கள் ஆறாமல் இருந்தால்

புண்கள் ஆறாமல் இருந்தால்

புண்கள் ஆறாமல் இருக்கும் போது அது அதிக கிருமிகள் தேங்கும் இடமாக மாறி விடக்கூடும். அதோடு சீழ், புழு வைக்கும் அளவுக்கு அந்த இடத்தில் பிரச்சனை வரக்கூடும். 

புண்கள் ஆறாமல் இருந்தால் எருக்கன் பூ பொடியை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அந்த இடத்தில் போட்டு வந்தால் புண் வேகமாக ஆறி விடும். 

புண்ணுள் இருக்கும் விஷக்கிருமிகளை வெளியேற்றும். வீக்கம், கட்டிகளையும் உடைத்து நோய் தீர்க்க செய்யும்.

குடல் புழு

குடல் புழு

குடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால், ஆசன வாயில் அரிப்பு இருந்தால் வயிற்றில் பூச்சிகள் இருப்பதற்கான அறிகுறி. 

பெண்கள் ஆண்களிடம் பழகும் போது கவணிக்க வேண்டியவை !

பூச்சிகளை வெளியெற்ற வெள்ளருக்கன் இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் புழுக்கள் வெளியேறும்.

விஷப்பூச்சிகள் கடித்தால்

விஷப்பூச்சிகள் கடித்தால்

விஷப்பூச்சிகள் கடித்தால் எருக்கன் இலையை அரைத்து அப்படியே பச்சையாக சாப்பிட கொடுக்க வேண்டும். அது விஷத்தை இறக்கும். 

தேள் கொட்டிய இடத்தில் எருக்கன் இலை சாறை தடவி எருக்கன் இலையை அப்படியே வைத்து கட்டி இரண்டு இலையை அப்படியே மென்று சாப்பிட கொடுத்து வைத்தியரிடம் அழைத்து செல்லலாம். 

முன்னோர்கள் பாம்பு கடித்தவர்களுக்கு கூட சிறு நெல்லியளவு எருக்கன் இலை விழுதை கொடுத்து தான் பிறகு வைத்தியரிடம் அழைத்து சென்றார்கள்.

பால்வினை நோய்

பால்வினை நோய்

பால்வினை நோய்ப்புண்கள் கொண்டிருப்பவர்கள் தீண்டத் தகாதவர்களாக பாவிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு செலவில்லாத மருந்து இந்த எருக்கஞ்செடியின் வேர். இந்த வேரை எடுத்து நெருப்பில் சுட்டு கரியாக்கி கொள்ளவும். 

அதை சுத்தமான விளக்கெண்ணெயில் குழைத்து புண்கள் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் சருமம் பழைய நிலைக்கு திரும்பும். இது கரப்பான், பால், வலிகளுக்கும் பயன்படுத்தலாம்.

பல் கூச்சம் நீங்க

பல் கூச்சம் நீங்க

எருக்கன் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் உப்பு கலந்து பல் தேய்த்து வந்தால் பல்சொத்தை வராமல் தடுக்கலாம். 

பல் கூச்சம், சொத்தைப்புழு போன்ற பிரச்சனைகளுக்கும் எருக்கன் பூ பொடி மருந்தாகும். காதில் சீழ் வடியும் குழந்தைகளுக்கு எருக்கன் சாறு உதவும். 

கேமராவில் மட்டும் ஆவிகள் சிக்குவது ஏன்?

எருக்கன் இலைச்சாறில் வசம்பு மற்றும் பெருங்காயம் சிட்டிகை சேர்த்து பூண்டு தட்டி அரை மனி நேரம் வைக்கவும். 

பிறகு இதை மேலாக எடுத்து இரண்டு சொட்டு காதில் விடவும். இது காதில் சீழ் வடிதலை உண்டாக்கும்.

குதிகால் வலி

குதிகால் வலி

குதிகால் வலி இருப்பவர்களுக்கும் இது மருந்தாகும். இரவு உறக்கத்துக்கு பிறகு காலை எழும் போதே குதிகால் வலியோடு எழுபவர்கள் 

இந்த வைத்தியம் செய்வதன் மூலம் நோயை முழுவதுமாக குணப்படுத்தி கொள்ள முடியும். 

ஏன் கோடைக் காலத்தில் லெகிங்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும்?

செங்கல்லை எடுத்து சூடு செய்து அதன் மேல் எருக்கன் இலையை பரப்பி அதன் மேல் குதிகால் படும்படி ஏறி சில நிமிடங்கள் நிற்கவும். அதிக சூடு வேண்டாம். 

பொறுக்கும் சூட்டில் இருந்தால் போதுமானது. இது பக்கவிளைவும் இல்லாதது.

முடிவு

வெள்ளருக்கை

இனி வெள்ளருக்கை உடல் நலனுக்கும் பயன்படுத்துங்கள். அளவாக பயன்படுத்துங்கள். 

புகைப் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

மேற்கண்ட பிரச்சனைகளுக்காக எருக்கன் பூவை பயன்படுத்துவதற்கு முன்பு சித்த மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)