கசூரி மேத்தி தயார் செய்வது எப்படி?





கசூரி மேத்தி தயார் செய்வது எப்படி?

0

கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இதை கஸ்தூரி மேத்தி என்றும் சொல்வார்கள். கஸ்தூரி மேத்தி டிரையா எல்லா கடையிலும் கிடைக்கும். 

கசூரி மேத்தி தயார் செய்வது
வெந்தய கீரைய பதப்படுத்தி காய வைத்தது தான், சிக்கன், மீனுடன் போடலாம், ஹைத்ராபத் அயிட்டங்கள் முக்கியமா பிரியாணிக்கு இதை பயன்படுத்துவார்கள்.

பிரா பெண்கள் அறிய வேண்டிய உண்மைகள் !

நல்ல மணமாக ரொம்ப நல்ல இருக்கும்,. வெந்த கீரை கிடைக்காதவர்கள். இப்படி இதை வாங்கி மேத்தி ரொட்டி, மேத்தி தால், ஆலு மேத்தி என வித வித மா செய்யலாம்.

இது வட இந்தியர்களின் சமையல் அறையில் பிரசித்தி பெற்ற ஒரு பொருள். அவர்கள் எல்லா கறிக்கும் இந்த கசூரி மேத்தியை உபயோகப்படுத்துவார்கள். 

எல்லா நார்த் இந்தியன் டிஸெஸ் செய்யும் போது இந்த இலைகளை சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.அதை நாமே வீட்டில் மிகவும் சுலபமாக தயார் செய்வது பற்றி இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

2 கட்டு வெந்தய கீரை

ஸ்டோரேஜ் பாட்டில்

செய்முறை :

வெந்தய கீரையில் உள்ள இலைகளை மட்டும், பிரித்து நன்கு தண்ணீரில் கழுவி, உடனே ஒரு துணியில் போட்டு நன்கு ஈரம் போகும் படி, இரண்டு, மூன்று முறை மாற்றி விட்டு, எடுத்து இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்தவும்.

கர்ப்பிணி பெண்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் ! 

நல்ல வெயில் உள்ள காலத்தில் தான் இது போல் செய்ய முடியும். கழுவி அப்படியே வைத்தால், இலைகள் அழுகிப் போய் விடும். 

இலைகளை கழுவியவுடன் துணியில் போடும் போதே பேன் காற்றின் அடியில் வைக்கவும். 

இரண்டு நாட்கள் நல்ல வெயிலில் காய்ந்து மொறு மொறுப்பாக வந்தவுடன் எடுத்து காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். 

எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பக்குவமாக வைத்திருக்கலாம். என்னிடம் உள்ளது போன வருடம் தயார் செய்தது.

பன்னீர் பட்டர் மசாலா, ஆலு மேத்தி, மட்டர் பன்னீர், தால் மகனி, தம் ஆலு, பாலக் பன்னீர், ஆலு கேப்ஸிகம் போன்ற எல்லா நார்த் இந்தியன் கறிகளிலும் சேர்க்கலாம். 

வெந்தய கீரையில் கசூரி மேத்தி

கறி செய்து முடித்து இறக்கும் தருவாயில் கசூரி மேத்தி இலைகளை கையால் நசுக்கி பொடித்து கலந்து இறக்கினால் கறியின் சுவையும், மணமும் மிகவும் அதிகரிக்கும்.

நரை முடி கருமையாக மீசையில் உள்ள இளநரை போக்க இதை பயன்படுத்துங்கள் !

குறிப்பு :

பிரஷ் வெந்தய கீரை எப்ப வேண்டுமானாலும் கிடைக்கும், வெந்தயத்தை ஒரு கைபிடி மண்ணில் வைத்து 

சின்ன தொட்டியில் வைத்தால் இரண்டு முன்று நாளில் நல்ல வெந்த கீரை கிடைக்கும உடம்பிற்கு குளிர்த்தி, வாய் புண் வயிற்று புண்ணை அகற்றும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)