பெருங்காயத்தூள் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் !





பெருங்காயத்தூள் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் !

0

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் . இதை, 'கடவுளர்களின் மருந்து' என்று குறிப்பிடுவது உண்டு. 

பெருங்காயத்தூள் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் !

பச்சையாக இருக்குறப்போ சகிக்க முடியாத இதனோட வாசனை, சமையல்ல சேர்த்த பிறகு ஆளை அசத்தும். ஃபெருலா என்னும் மூலிகையில் இருந்து பிரித்தெரிக்கப்பட்ட ஒரு மணம் கொண்ட மசாலாப் பொருள் பெருங்காயம். 

இது இந்திய மற்றும் பாரசீக உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மசாலாப் பொருள் பொதுவாக தாளிக்கும் போது தான் பயன்படுத்தப்படுகிறது.

பெருங்காயத்தின் ஊட்டச்சத்து பற்றி பேசுகையில், இந்த சக்தி வாய்ந்த மசாலாப் பொருளில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நியாசின், கரோட்டின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. 

அதோடு இதில் ஆன்டி-வைரல்👈, ஆன்டி - பாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளதால், நிவாரணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகலிள் தான் பெருங்காய செடி வளருது. 

சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறி விட்டு, அதுல வழியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைச்சா, அது தான் பெருங்காயம். 

பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம்னு இதுல ரெண்டு வகை இருக்குது. ஆயுர்வேதத்தில் இது ஒரு முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் பலரும் நீரில் பெருங்காத் தூளை சேர்த்து குடிப்பார்கள் தெரியுமா? பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், நன்மைகள் என்னவென்று காண்போம்.

சர்க்கரை நோய்க்கு நல்லது

பெருங்காயத்தூள் கலந்த நீர் சர்க்கரை நோய்க்கு நல்லது

மஞ்சள் நிற பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிக்கும் போது, இரத்த அழுத்தம் சீராகிறது. அதோடு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்துல செரிக்க வைக்கும். 

வாயுக்கோளாறை விரைவிலேயே சரி செய்யும் மருந்து இது. பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பொருட்கள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அசிடிட்டியைத் தடுக்க உதவுகின்றன.

ஆஸ்துமா

ஆஸ்துமா

ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து குடித்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஆஸ்துமாவைத் தூண்டும் பாக்டீரியாக்களை அழித்து, ஆஸ்துமாவைத் தடுக்கும்.

எலும்புகள் வலுபெறும்

பெருங்காயத்தூள் கலந்த நீரைக் குடிப்பதால் எலும்புகள் வலுபெறும்

நீரில் பெருங்காயத்தைக் கலந்து தினமும் குடிப்பது, எலும்புகளை வலிமையாக்க உதவுகின்றன. பெருங்காயத்தில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள், ஆரோக்கியமான பற்கள் மற்றும் வலுவான எலும்புகளுக்கு வழிவகுக்கின்றன.

இரத்த சோகையை எதிர்க்கும்

பெருங்காயத்தூள் இரத்த சோகையை எதிர்க்கும்

பெருங்காயத்தில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள்👈, உடலில் இரத்த சோகைக்கு எதிரான ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைக்க உதவுகின்றன. 

மேலும் இதில் உள்ள ஆன்டி - கார்சினோஜெனிக் பொருட்கள், புற்றுநோயைத் தடுக்கின்றன.

சுவாச கோளாறு

சுவாச கோளாறு

பெருங்காயத் தூளை ஒருவர் தினமும் சுடுநீரில்👈 கலந்து குடிப்பதன் மூலம், சுவாசக் கோளாறுகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். 

முக்கியமாக குளிர் காலத்தில் அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க, பெருங்காயத்தை நீரில் கலந்து குடிப்பது நல்ல பாதுகாப்பை வழங்கும்.

வலி நிவாரணி

வலி நிவாரணி

பெருங்காயத்தில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வலி நிவாரண பண்புகள் உள்ளதால், உடல் வலியில் இருந்து மட்டுமின்றி, தலைவலி👈, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

மாதவிடாய்

மாதவிடாய்

தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா, வயிற்று வலி👈, வயிறு உப்புசமாக இருக்குறது போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது. 

பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். 

மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை👈 உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொண்டே வருவது நல்லது. 

கண்களுக்கு நல்லது

பெருங்காயத்தூள் கண்களுக்கு நல்லது

பெருங்காயத்தில் பீட்டா- கரோட்டின் உள்ளது. இது கண்களின் 👈ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுவதோடு, கண்கள் வறட்சியடைவதையும் தடுக்கின்றன. 

நீங்கள் கணினி முன் அதிக நேரம் செலவிடுபவராயின், தினமும் நீரில் பெருங்காயத் தூளை கலந்து குடியுங்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மனநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, மன அழுத்தம்👈 அல்லது மனச் சோர்வை உணர்ந்தால், பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து குடியுங்கள். 

இதனால் அதில் உள்ள மன இறுக்க நிவாரண பண்புகள், நல்ல மனநிலையைப் பெற உதவி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.

முடிவு

பெருங்காயத்தின்

நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம்👈 இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். 

சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். 

பெருங்காயத்தின் மணம் எளிதில் போய் விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டு வைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)