மகாராஷ்டிரா மல்வானி இறால் குழம்பு செய்வது எப்படி?





மகாராஷ்டிரா மல்வானி இறால் குழம்பு செய்வது எப்படி?

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோ குளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
மகாராஷ்டிரா மல்வானி இறால் குழம்பு செய்வது எப்படி?
அதிக சத்து: கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 
இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 

இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. 

இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும். 

சரி இனி இறால் பயன்படுத்தி மகாராஷ்டிரா மல்வானி இறால் குழம்பு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
தேவையான பொருட்கள்:

இறால் – 500 கிராம்

புளிச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 4 பற்கள் (தட்டியது)

தேங்காய் பால் – 1 கப்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 2 (நறுக்கியது)

மல்லி – 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்ழுன்

பட்டை – 1

வரமிளகாய் – 2

கிராம்பு – 3

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் – 1/2 கப் (துருவியது)

சோம்பு – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

பச்சை ஏலக்காய் – 2

செய்முறை: 
மகாராஷ்டிரா மல்வானி இறால் குழம்பு செய்வது
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது உப்பு தூவி, பிரட்டி தனியாக வைத்து விட வேண்டும். 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், சோம்பு, மல்லி, வெந்தயம் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் வெங்காயம் மற்றும் தேங்காய சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, இறக்க வேண்டும். 

கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாகவும் மென்மையாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்த்தும், தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும். 

பிறகு தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு, இறாலை போட்டு, குறைவான தீயிலேயே 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். 
இறுதியில் புளிகரைசலை ஊற்றி, கரம் மசாலா தூவி கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மல்வானி இறால் குழம்பு தயார். 

இதன் மேல் கொத்த மல்லியைத் தூவி, சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Tags: