ஆட்டு மண்ணீரலில் (சுவரொட்டி) கறி பிரட்டல் செய்வது எப்படி?





ஆட்டு மண்ணீரலில் (சுவரொட்டி) கறி பிரட்டல் செய்வது எப்படி?

ஆட்டு மண்ணீரலில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. இதை சுவரொட்டின்னு சொல்றதுண்டு. இன்று இந்த சுவரொட்டி கறி பிரட்டல் செய்வது எப்படின்னு பார்க்கலாம். 
ஆட்டு மண்ணீரலில் (சுவரொட்டி) கறி பிரட்டல்
தேவையான பொருட்கள்

ஆட்டு சுவரொட்டி - கால் கிலோ

சின்ன வெங்காயம் - 150 கிராம்

பச்சை மிளகாய் - 2

அரைக்க

தேங்காய் - 2 துண்டு மிளகு - இரண்டு தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

நல்லெண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். ஆட்டு சுவரொட்டியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சற்று தூக்கலாக விட்டு சூடானதும் சுத்தம் செய்த ஆட்டு சுவரொட்டியை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு பொதியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 
சிறிது வாசம் வந்ததும் அரைத்த தேங்காய் விழுதுகளைச் சேர்த்து பச்சை வாசம் போன பிறகு இறக்கி பரிமாறவும். சூப்பரான சுவரொட்டி கறி பிரட்டல் ரெடி.
Tags: