தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா செய்வது எப்படி?





தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா செய்வது எப்படி?

என்னென்ன தேவை?
பழுத்த பெங்களூர் தக்காளி - 4,

பெரிய வெங்காயம் - 1,

ஏலக்காய் - 2, நறுக்கிய பனீர் - 1 கப்,

தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்,

கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,

கொத்த மல்லித்தழை - சிறிது.
மூளை முடக்கம் என்றால் என்ன? இது எப்படி ஏற்படுகிறது?
எப்படிச் செய்வது?
தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பனீரை சுடு தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் பனீர் மிருதுவாகி விடும்.

கடாயில் எண்ணெயை காய வைத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

பின்பு மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், ஏலக்காய், கரம் மசாலாத்தூள், லேசாக தண்ணீர் சேர்த்து, தக்காளியை போட்டு வதக்கி, பனீர், உப்பு போடவும். 
தாமிர பாத்திரத்தில் உள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் நன்மைகள் !
மசாலா நன்கு கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி கொத்த மல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
Tags: